அதிராம்பட்டினம், செப். 22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். செயலர் உபைதூர் ரஹ்மான், பொருளாளர் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சங்க கெளராவத் தலைவர் எஸ்.ஏ.எம் ஜபருல்லா முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையப் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 800 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் சமூக ஆர்வலர் ஹாஜி முஹம்மது இப்ராஹீம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். செயலர் உபைதூர் ரஹ்மான், பொருளாளர் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சங்க கெளராவத் தலைவர் எஸ்.ஏ.எம் ஜபருல்லா முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையப் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 800 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் சமூக ஆர்வலர் ஹாஜி முஹம்மது இப்ராஹீம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலச்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.