.

Pages

Thursday, September 28, 2017

ரோஹிங்கிய முஸ்லீம்கள் இனப் படுகொலையைக் கண்டித்து, அதிரையில் கண்டனப் பொதுக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 28
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், மியான்மர் ரோஹிங்கிய முஸ்லீம்கள் இன படுகொலை கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும் கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் அதிரை பேரூர் செயலர் எம்.ஆர் கமாலுதீன் தலைமை வகித்தார். தமுமுக - மமக மாவட்டத் தலைவர் எஸ். அகமது ஹாஜா, மாநில ஊடகப்பிரிவு துணைச்செயலாளர் எம். ஃபவாஸ்கான், மாவட்ட செயலர் எஸ். சேக் முகைதீன், மமக மாவட்ட செயலர் எம். ஜபருல்லா, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எஸ் முகம்மது சேக்காதி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஏ. சலீம், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, அதிரை பேரூர் துணைத் தலைவர் எச். செய்யது புஹாரி, மமக அதிரை பேரூர் வணிகர் அணிச் செயலர் ஆர்.எம். நெய்னா முகமது, தமுமுக அதிரை பேரூர் பொருளாளர் எஸ். முகமது யூசுப், இஸ்லாமிய பிராசாரப் பேரவை அதிரை பேரூர் பொருளாளர் எஸ். சாகுல்ஹமீது, மமக அதிரை பேரூர் தொழிலாளர் அணிச் செயலாளர் ஜே. அப்துல் ஹக்கீம், மாவட்ட பொருளாளர் இன்ஜினியர் ஏ. முகமது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும், அவ்வமைப்பின் மாநில பேச்சாளர் பழனி பாருக், மமக மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஐ.எம் பாதுஷா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

கூட்டத்தில், ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது நடத்திவரும் தாக்குதலை தடுக்காத மியான்மர் அரசை வன்மையாக கண்டிப்பது எனவும், இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு, இந்தியாவில் உள்ள மியான்மர் அரசின் தூதரை திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் சுகாதரச் சீர்கேட்டால் வேகமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தி, இப்பகுதியில் சுகாதாரப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், ஈஸ்ட் கோஸ்ட் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் சட்டவிரோதமாக முழு நேரமும் இயங்கி வரும் மது விற்பனையை தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிராம்பட்டினம் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனையாகும் கஞ்சா, லாட்டரி சீட்டுகள் போன்றவற்றை தடுத்து நிறுத்தவேண்டும், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதரச் சீர்கேட்டினை சீர்படுத்தக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை தமுமுக, மமக மாவட்டத் தலைவர் அகமது ஹாஜா வாசித்தார்.

முன்னதாக, மமக அதிரை பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது வரவேற்றுப்பேசினார். கூட்ட முடிவில் தமுமுக அமெரிக்கா பொறுப்பாளர் மரைக்கான் என்கிற அப்துல் கபூர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.