.

Pages

Monday, September 25, 2017

அதிராம்பட்டினத்தில் 48.50 மி.மீ மழை பதிவு !

அதிராம்பட்டினம், செப். 25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால் அதிரையின் பிரதான சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.

இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 48.50 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில்
அதிகபட்சமாக கும்பகோணத்தில் 90 மி.மீ, பட்டுக்கோட்டையில் 27.30 மி.மீ, பேராவூரணி 2 மி.மீ, மதுக்கூரில் 1.20 மி.மீ மழை பதிவாகியது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.