அதிரை நியூஸ்: மே 16
வளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளில் நாளை வியாழன் முதல் புனித நோன்பு துவங்குகிறது
653. ”ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
656. ”பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி: 1909 அபூஹுரைரா (ரலி).
நேற்றிரவு ஷஃபான் மாதத்தின் 29வது இரவு பூர்த்தியானதை தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளதன் அடிப்படையில் உலகெங்கும் பிறை பிறப்பு கண்காணிக்கப்பட்டது எனினும் எங்கும் பிறை தென்படவில்லை என்று வந்த செய்திகளை அடுத்து வளைகுடா அரபுநாடுகளின் அரசுகள் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்தும், நாளை வியாழனை (மே 17) புனித ரமலான் மாதத்தின் முதல் நாள் எனவும் அறிவிப்புச் செய்தன.
மே 17 முதல் புனித ரமலான் மாத நோன்புகள் துவங்குவதாக இதுவரை அறிவித்துள்ள முஸ்லீம் நாடுகள் உள்ளிட்ட முக்கிய உலக நாடுகள் வருமாறு:
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், லெபனான், ஜோர்டான், ஈராக், மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, தென் கொரியா, ஜப்பான் ஆகியன அறிவித்துள்ளன.
Sources: Gulf News & islamkalvi.com
தமிழில்: நம்ம ஊரான்
வளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளில் நாளை வியாழன் முதல் புனித நோன்பு துவங்குகிறது
653. ”ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
656. ”பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி: 1909 அபூஹுரைரா (ரலி).
நேற்றிரவு ஷஃபான் மாதத்தின் 29வது இரவு பூர்த்தியானதை தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளதன் அடிப்படையில் உலகெங்கும் பிறை பிறப்பு கண்காணிக்கப்பட்டது எனினும் எங்கும் பிறை தென்படவில்லை என்று வந்த செய்திகளை அடுத்து வளைகுடா அரபுநாடுகளின் அரசுகள் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்தும், நாளை வியாழனை (மே 17) புனித ரமலான் மாதத்தின் முதல் நாள் எனவும் அறிவிப்புச் செய்தன.
மே 17 முதல் புனித ரமலான் மாத நோன்புகள் துவங்குவதாக இதுவரை அறிவித்துள்ள முஸ்லீம் நாடுகள் உள்ளிட்ட முக்கிய உலக நாடுகள் வருமாறு:
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், லெபனான், ஜோர்டான், ஈராக், மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, தென் கொரியா, ஜப்பான் ஆகியன அறிவித்துள்ளன.
Sources: Gulf News & islamkalvi.com
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.