அதிராம்பட்டினம், மே 13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் எம்.எஸ்.எம் நகர் யுனிட்டி கிரிக்கெட் கிளப் (MUCC ) 5 ஆம் ஆண்டு நடத்தும் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் மற்றும் பரிசளிப்பு விழா அதிராம்பட்டினம் ஆதம் நகர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொடர் போட்டியில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி அணிகள் கலந்துகொண்டு விளையாடியது. இன்று தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில், அதிரை AFCC ஜூனியர், அதிரை MUCC ஆகிய அணிகள் கலந்துகொண்டு விளையாடியது. ஆட்ட முடிவில் அதிரை AFCC ஜூனியர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டித் தலைவர் எம்.ஒய் அஹமது ஜலாலுதீன், பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி ஆலோசகர் இ.வாப்பு மரைக்காயர் மற்றும் எம்.எஸ்.எம் நகர் யுனிட்டி கிரிக்கெட் கிளப் (MUCC) நிர்வாகிகள் கலந்துகொண்டு சாம்பியன் பட்டம் வென்ற அதிரை AFCC ஜூனியர் அணிக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் வின்னர் பட்டம் வென்ற அதிரை MUCC அணிக்கு ரூ.4 ஆயிரம், 3-வது இடம் பிடித்த அதிரை ASC அணிக்கு ரூ.3 ஆயிரம் ஆகிய ரொக்கப்பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் எம்.எஸ்.எம் நகர் யுனிட்டி கிரிக்கெட் கிளப் (MUCC ) 5 ஆம் ஆண்டு நடத்தும் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் மற்றும் பரிசளிப்பு விழா அதிராம்பட்டினம் ஆதம் நகர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொடர் போட்டியில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி அணிகள் கலந்துகொண்டு விளையாடியது. இன்று தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில், அதிரை AFCC ஜூனியர், அதிரை MUCC ஆகிய அணிகள் கலந்துகொண்டு விளையாடியது. ஆட்ட முடிவில் அதிரை AFCC ஜூனியர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டித் தலைவர் எம்.ஒய் அஹமது ஜலாலுதீன், பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி ஆலோசகர் இ.வாப்பு மரைக்காயர் மற்றும் எம்.எஸ்.எம் நகர் யுனிட்டி கிரிக்கெட் கிளப் (MUCC) நிர்வாகிகள் கலந்துகொண்டு சாம்பியன் பட்டம் வென்ற அதிரை AFCC ஜூனியர் அணிக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் வின்னர் பட்டம் வென்ற அதிரை MUCC அணிக்கு ரூ.4 ஆயிரம், 3-வது இடம் பிடித்த அதிரை ASC அணிக்கு ரூ.3 ஆயிரம் ஆகிய ரொக்கப்பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.