.

Pages

Monday, May 14, 2018

இரயில்வே பாதை புதுப்பிக்கும் பணி: பட்டுக்கோட்டை ~ ராஜாமடம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை!

அதிராம்பட்டினம், மே 14
பட்டுக்கோட்டை – ராஜாமடம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையிலிருந்து ராஜாமடம் செல்லும் சாலையை  கனரக வாகனங்கள்  உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (14.05.2018) திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் ஆள்நடமாட்டம் உள்ள ரயில்வே பாதை LC No.82 இடம் 104/6-7 திருத்துறைப்பூண்டி மற்றும் பட்டுக்கோட்டை  நிறுத்தங்களுக்கு இடைப்பட்ட இரயில்வே பாதையை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், 15.05.2018 முதல் 15.06.2018 வரை பட்டுக்கோட்டையிலிருந்து ராஜாமடம் செல்லும் பாதையை கனரக வாகனங்கள் உபயோகிக்க தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.