தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை, நேற்று புதன்கிழமை இரவு தொடங்கி இன்று வியாழக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.
அதிராம்பட்டினம், பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தன. இப்பகுதியில், முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கிக் காணப்படுகின்றன. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியின் பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளிகின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதிராம்பட்டினத்தில் இன்று (அக்.24) வியாழக்கிழமை காலை 7 மணி நேர நிலவரப்படி 44.70 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில் 577.40 மி.மீ மழையளவு பதிவானது. அதிகபட்சமாக வல்லத்தில் 90 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக அய்யம்பேட்டையில் 11 மி.மீட்டரும் பதிவானது.
மாவட்டத்தில் பதிவான மழையளவு வருமாறு (மி.மீ):
தஞ்சாவூர் 25, வல்லம் 90, குருங்குளம் 14, திருவையாறு 25, பூதலூர் 36.20, திருக்காட்டுப்பள்ளி 36.60, கல்லணை 65.20, ஒரத்தநாடு 23, நெய்வாசல் தென்பாதி 13.80, வெட்டிக்காடு 11.60, கும்பகோணம் 13, பாபநாசம் 18.20, அய்யம்பேட்டை 11, திருவிடைமருதூர் 16, மஞ்சளாறு 42.20, அணைக்கரை 14.40, பட்டுக்கோட்டை 12.50, அதிராம்பட்டினம் 44.70, ஈச்சன்விடுதி 22.40, மதுக்கூர் 20, பேராவூரணி 22.60 மி.மீ என பதிவானது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.