.

Pages

Wednesday, October 9, 2019

டெல்லியில் பதக்கம் வென்ற காதிர் முகைதீன் கல்லூரி NCC மாணவனுக்கு பாராட்டு!

அதிராம்பட்டினம், அக்.09
அகில இந்திய அளவில் டெல்லி ராஜ்பாட்டில் கடந்த செப். 27ந் தேதி நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர் கே.மணிகண்டன் பங்கேற்று பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதையடுத்து, சாதனை படைத்த மாணவன் கே.மணிகண்டனை, கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதில்,
கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன், தேசிய மாணவர் படை பொறுப்பு அலுவலர் பேராசிரியர் எஸ்.அப்பாஸ், பேராசிரியர்கள் எஸ்.பி கணபதி, டி.லெனின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.