.

Pages

Monday, October 21, 2019

அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியில் இளைஞர்கள் இணைந்தனர்!

அதிராம்பட்டினம், அக்.21
அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியில் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  இணைந்தனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு வார்டு கிளை கட்டமைப்பு, கொடியேற்றம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் மீரா சாகிப் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்தனர்.

அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.ஜெ ஜியாவுதீன் தலைமையில் அக்கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர். பின்னர், மாவட்டச்செயலாளர் தேவராஜ் கட்சி கொடியேற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர் முனாஃப், கிளை பொறுப்பாளர்கள் அஷ்ரப், நசீர் உள்ளிட்ட அக்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.