.

Pages

Monday, October 28, 2019

சுகமாய் எழுந்து வா சுர்ஜித்!

அன்னையின் கருவறையில்
அனுபவித்த கதகதப்பை
அனுபவிக்கவே மீண்டும்
ஆழ்குழாய் வழியாக
பூமியன் கதகதப்பைக் காண
புதைந்தாயோ குழந்தையே சுர்ஜித்!

சட்டங்களும் விதிகளும்
சரியில்லை என்பதை
சரியாக உணரவேண்டும் மன்பதை
பட்டங்கள் பெற்றவர்ட்குப்
பாடங்களும் பயிற்சிகளும்
பள்ளத்திலிருந்துச் சொல்கின்றாயோ?
உள்ளங்கள் வேண்டுகின்றன
பள்ளங்கள் தோண்டுகின்றனர்
உறங்காமல் உண்ணாமல் இருக்கின்றனர்
இறங்கிய வேகத்தில்
எழுந்து வா எழுச்சித் தர வா வா

மதங்களால் பிரிந்தவர்களை
மனங்களால் கூட்டினாய்
நிதமுனக்காகப் பிரார்த்தனை
நிகழவே மாற்றினாய்

சிரியாவில் இதுபோல்
சிக்கியப் பாலகனும்
அரிதாய்க் கிடைத்தானாம்
அதுபோல் மீண்டு வா
அதுவரைத் தோணாடுவோம் பார்!

"பாதாளக் குழிகளை மூடுக"
பாடம் நடத்துகின்றாயோ
பாலகனே நீதான் எங்கள்
பாட வகுப்பாசிரியரானாயோ?

ஆசிரியரை விடவும்
ஆகச் சிறந்த
தியாகமடா நீ செய்தது!
தெளிவூட்டச் சென்றது!!

தோண்டுவோம் தோண்டுவோம்
தோளில் உன்னை வீரர்கள் சுமக்கும் வரை
வேண்டுவோம் வேண்டுவோம்
வேதனை தீர்க்க இறையருள் கிடைக்கும் வரை
வா வா குழந்தாய்
வாரியணைக்க
வாசலிலே உன் தாய்!

கவிதை ஆக்கம்: 
"கவியன்பன் கலாம்" 
அதிரை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.