.

Pages

Saturday, October 19, 2019

அதிராம்பட்டினம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கல்!

அதிராம்பட்டினம், அக்.19
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை யுனானிப் பிரிவு சாா்பில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பரப்புரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை (யுனானிப் பிரிவு) மருத்துவர் சி. ஷெரீன் பேகம் முகாமை தொடங்கி வைத்து, டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை கவுன்சிலர் பாரதி டெங்கு ஒழிப்பு வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார். இதில், 900 மாணவிகள் பேருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டன. முகாமில், பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.