.

Pages

Thursday, October 31, 2019

இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டியில் இமாம் ஷாஃபி மெட்ரிக்.பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்!

அதிராம்பட்டினம், அக்.31
பள்ளி மாணவர்களுக்கு இடையேயான இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டி அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இப்ன் அல் ஹைதம் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி துணைத் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் தலைமை வகித்தார். போட்டி நடுவர்களாக, மவ்லவி கலீல், மவ்லவி ஹுசைன், மவ்லவி ஆஷிக், மவ்லவி பரக்கத்துல்லா, மவ்லவி அனஸ், ஹாபிஸ் அப்பாஸ், மவ்லவி நவாஸ், ஹாபில் நூர் முகமது ஆகியோர் இருந்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு இடையேயான பாங்கு சொல்தல், குர்ஆன் மனனம், கிராஅத் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, புதுப்பட்டினம் அபு மெட்ரிகுலேஷன் பள்ளி, கட்டுமாவாடி அல்-ஹுதா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 38 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பாங்கு சொல்தல் போட்டியில், இசட்.முஹம்மது (அல்-ஹுதா), எம். ஐய. அப்துர் ரஸ்ஸாக் (காதிர் முகைதீன்), எம்.முஹம்மது சலீம் (இமாம் ஷாஃபி) முதல் 3 இடங்களையும், குர்ஆன் மனனப் போட்டியில், எம்.ஐ. சஹ்ல் (இமாம் ஷாஃபி), எச்.முஹம்மத் இஸ்ஹாக் (இமாம் ஷாஃபி) ஆகியோர் முதல் 2 இடங்களையும் எம்.எஸ்.முஹம்மது சமீஹ் (இமாம் ஷாஃபி), ஏ.ஹாரூன் ரஷீத் (அல்-ஹுதா), ஆர்.ஷேக் ஹகீம் (அபு மெட்ரிக்) ஆகியோர் மூன்றாமிடத்தையும், கிராத் போட்டியில், எம்.ஷர்ஃபுத்தீன் (இமாம் ஷாஃபி), ஏ.முஹம்மது ஜெய்த் (இமாம் ஷாஃபி) ஆகியோர் முதல் இரண்டு இடங்களையும், எம்.அஹ்மத் ஃபாயிஸ் (பிரிலியண்ட்) ஜெ.முஹம்மத் ஷாஃபீக் (அல்-ஹுதா) ஆகியோர் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட மவ்லவி. இப்ராஹீம், மவ்லவி. அப்துல் ஹாதி முப்தி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள், சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். மேலும், போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.