.

Pages

Tuesday, October 8, 2019

அதிரையில் பெண்கள் 5 வேளை தொழும் வசதியுள்ள பள்ளிகள்!

அதிரை நியூஸ்: அக்.08
பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதை இஸ்லாம் தடுக்கவில்லை. அவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வந்து தொழலாம் என்றாலும் அவர்களின் வீடுகளில் தொழுவதே சிறந்தது என வழிகாட்டுகின்றது.

அதேவேளை, தற்காலத்தில் பெண்கள் தவிர்க்க முடியாத வேலைகள், மருத்துவமனைகள் போன்றவற்றிற்காக செல்லும்போது அருகில் பெண்கள் தொழும் வசதியுடன் ஒரு பள்ளியில் இருந்தால் நிச்சயமாக அவர்கள் குறித்த நேரத்தில் தங்களின் கடமையை நிறைவேற்ற மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.

அதிரையில் பெண்கள் ஐவேளை தொழும் வசதியுள்ள மஸ்ஜிதுகள்:
1. மஸ்ஜித் அபூபக்கர் சித்திக் (ரலி), சானா வயல், மேலத்தெரு.

இங்கு கடந்த சுமார் 1-1/2 ஆண்டுகளாகவே பெண்கள் ஐவேளையும் ஜமாத்துடன் சேர்ந்து தொழ தங்களின் வசதிக்கேற்ப வந்து செல்கின்றனர் என்பதுடன் அவர்களுக்கான  அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
 
 
2. ஷாதுலியா புதுப்பள்ளி, ஆஸ்பத்திரி தெரு.

மருத்துவமனை மற்றும் வழிப்போக்கர்களாக வரும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள பள்ளி இது என்றால் அது மிகையல்ல.
 
 
 
பட்டுக்கோட்டையில் பெண்கள் தொழ வசதியுள்ள பள்ளி:
3. அதிரை ஹாஜி காதிர் முகையதீன் வக்ப் பள்ளிவாசல் (மணிக்கூண்டு பள்ளிவாசல்)

பட்டுக்கோட்டைக்கு வந்து செல்லும் சுற்றுவட்டார ஊரார்கள் அனைவருக்கும் பயனிருப்பதைப் போல் பெண்களுக்கும் மெயின் கேட் அருகிலுள்ள மாடியில் தனித்தொழுகைக் கூடம் வசதி செய்து தரப்பட்டுள்ள பள்ளி இது.
 
தஞ்சையில் பெண்கள் தொழ வசதியுள்ள மஸ்ஜித்:
4. ஆற்றங்கரை பள்ளிவாசல் தஞ்சை பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்கும் பெண்கள் வந்து தொழுது செல்ல தனி தொழுகைக்கூட வசதி செய்து தரப்பட்டுள்ளது.

குறிப்பு: 
1. இது நாம் அறிந்தவரையிலான தகவல்கள் மட்டுமே, மேலும் விபரம் அறிந்தவர்கள் அது குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.

2. பெண்கள் பள்ளிக்கு வந்து செல்வது குறித்த முழுமையாக வழிகாட்டல்களை அறிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிக்குள் சென்று படித்து அறிந்து கொள்ளலாம்.

சுட்டியை கிளிக் செய்க:

அதிரை அமீன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.