அதிராம்பட்டினம், அக்.13
ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் அலுவல் வருகை விழா அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் என்.மணிமாறன், மாவட்ட துணை ஆளுநர் என்.செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு ரோட்டரி சங்க சேவைத்திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசினர். முன்னதாக, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் டி.முகமது நவாஸ்கான் வரவேற்றுப் பேசினார். செயலாளர் எஸ்.சாகுல்ஹமீது சேவை அறிக்கை வாசித்தார்.
காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களின் ஒழுக்கம், நேர்மை, நம்பகத்தன்மை போன்ற சிறந்த பண்புகளை வளர்க்கும் விதத்தில், நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 'HONESTY SHOP' என்ற பெயரில் மாணவர்களுக்கு தேவைப்படும் கல்வி உபகரணங்கள் அடங்கிய நேர்மை அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது. விற்பனையை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தொடங்கி வைத்து, மாணவர்களிடையே சிறப்புரை நிகழ்த்தினார். மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை சுயமாக எடுத்துக்கொண்டு அதற்குரிய முழு கட்டணத்தையும் அருகில் உள்ள பணப்பெட்டியில் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் என்.எம் முகமது ஹனீபா, பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.மாலதி, பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கிய ராஜ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முகமது சம்சுதீன், அகமது மன்சூர்,கே.வைரவன்,வெங்கடேஷ், எம்.மன்சூர், பிரபு, அன்வர், இப்ராஹிம், முகைதீன் அப்துல் காதர், நவாஸ் கான், ராஜிக் அகமது, ஜமால் முகமது, முகமது பாரூக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் அலுவல் வருகை விழா அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் என்.மணிமாறன், மாவட்ட துணை ஆளுநர் என்.செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு ரோட்டரி சங்க சேவைத்திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசினர். முன்னதாக, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் டி.முகமது நவாஸ்கான் வரவேற்றுப் பேசினார். செயலாளர் எஸ்.சாகுல்ஹமீது சேவை அறிக்கை வாசித்தார்.
காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களின் ஒழுக்கம், நேர்மை, நம்பகத்தன்மை போன்ற சிறந்த பண்புகளை வளர்க்கும் விதத்தில், நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 'HONESTY SHOP' என்ற பெயரில் மாணவர்களுக்கு தேவைப்படும் கல்வி உபகரணங்கள் அடங்கிய நேர்மை அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது. விற்பனையை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தொடங்கி வைத்து, மாணவர்களிடையே சிறப்புரை நிகழ்த்தினார். மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை சுயமாக எடுத்துக்கொண்டு அதற்குரிய முழு கட்டணத்தையும் அருகில் உள்ள பணப்பெட்டியில் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் என்.எம் முகமது ஹனீபா, பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.மாலதி, பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கிய ராஜ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முகமது சம்சுதீன், அகமது மன்சூர்,கே.வைரவன்,வெங்கடேஷ், எம்.மன்சூர், பிரபு, அன்வர், இப்ராஹிம், முகைதீன் அப்துல் காதர், நவாஸ் கான், ராஜிக் அகமது, ஜமால் முகமது, முகமது பாரூக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.