அதிராம்பட்டினம், அக்.16
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து ஆற்றிய உரையில், கல்லூரி தமிழ்த்துறையின் கடந்தகால சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.
கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில்; முன்னாள் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சி கல்லூரி வளர்சிக்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் மிகவும் உந்துதலாக அமையும்' என்றார்.
தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் அ. கலீல் ரஹ்மான் வரவேற்றுப் பேசினார். கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் எம். முகமது முகைதீன், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.பி கணபதி, முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ. முகமது அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், கடந்த ஆண்டுகளில் தமிழ்த் துறையில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 40 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை பேராசிரியை டி.ஆர் நிவேதா தொகுத்தளித்தார். நிறைவில், கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை பி.ஜெய்னபா பேகம் நன்றி கூறினார்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து ஆற்றிய உரையில், கல்லூரி தமிழ்த்துறையின் கடந்தகால சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.
கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில்; முன்னாள் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சி கல்லூரி வளர்சிக்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் மிகவும் உந்துதலாக அமையும்' என்றார்.
தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் அ. கலீல் ரஹ்மான் வரவேற்றுப் பேசினார். கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் எம். முகமது முகைதீன், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.பி கணபதி, முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ. முகமது அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், கடந்த ஆண்டுகளில் தமிழ்த் துறையில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 40 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை பேராசிரியை டி.ஆர் நிவேதா தொகுத்தளித்தார். நிறைவில், கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை பி.ஜெய்னபா பேகம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.