.

Pages

Wednesday, October 16, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் உலக உணவு தின விழா கொண்டாட்டம்!

அதிராம்பட்டினம், செப்.16
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மனையியல் துறை சார்பில், உலக உணவு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்துப் பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் (சித்தா பிரிவு) மருத்துவர் இ. அருண் குமார், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை (யுனானிப் பிரிவு) மருத்துவர் சி. ஷெரீன் பேகம் ஆகியோர் கலந்துகொண்டு 'ஆரோக்கியமான உணவும், பட்டினியில்லா உலகும்' என்ற தலைப்பில் பேசினர். விழாவில், கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டன. மேலும், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை, மனையியல் துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.ரவீந்தரன் செய்திருந்தார்.

முன்னதாக, கல்லூரி மனையியல் துறைத்தலைவர் பேராசிரியை எஸ்.ஆரிபா வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியினை, மனையியல் பிரிவு மாணவிகள் வி.செளமியா, எம்.அரசி ஆகியோர் தொகுத்தளித்தனர்.  நிறைவில், மனையியல் துறை பேராசிரியை ஏ. ஆர்த்தி  நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி பொருளாதாரத்துறைத் தலைவர் பேராசிரியர் பி. கணபதி, கணிதத்துறை தலைவர் பேராசிரியர் டி.லெனின், விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஏ.அம்சத் உட்பட கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.