.

Pages

Friday, October 11, 2019

அதிரை இளைஞர்கள் உதவியுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் புதைப்பு!

அதிராம்பட்டினம், அக்.11
கலாம் நண்பர்கள் மற்றும் அதிராம்பட்டினம் இளைஞர்கள் உதவியுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அதிராம்பட்டினம் அடுத்து பரக்கலக்கோட்டை வடகாட்டில் உள்ள பாட்டுவனச்சேரி ஆற்றின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிராம்பட்டினம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடையாளம் தெரியாததால், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பிணவறையில் சடலம் வைக்கப்பட்டு இருந்த நிலையில், போலீசார் அனுமதியுடன் கலாம் நண்பர்கள் மற்றும் அதிராம்பட்டினம் இளைஞர்கள் இணைந்து அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே உள்ள மயானத்தில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்தனர். இவர்களின் மனிதநேயப் பணியை பொதுமக்கள் பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.