அதிராம்பட்டினம், அக்.21
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், கிளை நிர்வாகிகள் மற்றும் பேச்சாளருக்கான நல்லொழுக்கப் பயிற்சி (தர்பியா) முகாம், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை தவ்ஹீத் பள்ளிவாசலில் அக்.19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதிராம்பட்டினம் கிளை-1, கிளை-2 நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அவ்வமைப்பின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆர்.அப்துல் கரீம், 'இறையச்சம்' என்ற தலைப்பிலும், மாநில செயலாளர்கள் சி.வி இம்ரான், 'லட்சியமும், அலட்சியமும்' என்ற தலைப்பிலும், தஞ்சை முஜீப், 'நிர்வாகிகளின் கவனத்திற்கு' என்ற தலைப்பிலும், ஐ.அன்சாரி, 'தொழுகைப் பயிற்சி' என்ற தலைப்பிலும், மாநிலப் பேச்சாளர் எம்.ஐ சுலைமான், 'தடம் புரளாத உள்ளம்' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.
முகாமில், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை, தொழுகைப் பயிற்சி, நல்லொழுக்கப் பயிற்சி, ஜனாஸா சட்டம் குறித்து செய்முறை விளக்கம் உள்ளிட்ட பயிற்சி வழங்கப்பட்டன. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், கிளை நிர்வாகிகள் மற்றும் பேச்சாளருக்கான நல்லொழுக்கப் பயிற்சி (தர்பியா) முகாம், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை தவ்ஹீத் பள்ளிவாசலில் அக்.19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதிராம்பட்டினம் கிளை-1, கிளை-2 நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அவ்வமைப்பின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆர்.அப்துல் கரீம், 'இறையச்சம்' என்ற தலைப்பிலும், மாநில செயலாளர்கள் சி.வி இம்ரான், 'லட்சியமும், அலட்சியமும்' என்ற தலைப்பிலும், தஞ்சை முஜீப், 'நிர்வாகிகளின் கவனத்திற்கு' என்ற தலைப்பிலும், ஐ.அன்சாரி, 'தொழுகைப் பயிற்சி' என்ற தலைப்பிலும், மாநிலப் பேச்சாளர் எம்.ஐ சுலைமான், 'தடம் புரளாத உள்ளம்' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.
முகாமில், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை, தொழுகைப் பயிற்சி, நல்லொழுக்கப் பயிற்சி, ஜனாஸா சட்டம் குறித்து செய்முறை விளக்கம் உள்ளிட்ட பயிற்சி வழங்கப்பட்டன. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.