.

Pages

Sunday, October 20, 2019

காதிர் முகைதீன் கல்லூரி பொருளியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் பொருளியல் துறை முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். பொருளியல் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.கணபதி வரவேற்றுப் பேசினார். பேராசிரியை என்.சித்ரா அறிமுக உரை நிகழ்த்தினார். கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் ஏ.முகமது அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில், கடந்த ஆண்டுகளில் பொருளியல் துறையில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை, பேராசிரியைகள் ஏ.அகிலாண்டேஸ்வரி, எம்.சுரதா ஷிபா ஆகியோர் தொகுத்தளித்தார். நிறைவில், கல்லூரிப் பேராசிரியர் எஸ்.அபுதாஹிர் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.