.

Pages

Saturday, October 19, 2019

அதிராம்பட்டினத்தில் TIYA அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.19
அதிராம்பட்டினம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA) அமைப்பின் சார்பில், புதிய நிர்வாகிகள் தேர்வு தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன் தலைமை வகித்தார். TIYA அமைப்பின் முன்னாள் தலைவர் என். முகமது மாலிக் கிராத் ஓதி கூட்டத்தை தொடங்கி வைத்தார். அதிரை TIYA அமைப்பின் தலைவர் எச்.சபிர் அகமது வரவேற்றுப் பேசினார்.

கடந்த காலங்களில் TIYA அமைப்பு ஆற்றிய சேவைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி, அபுதாபி தமிழ் சங்க முன்னாள் தலைவர் மு. காதர் முகைதீன், என். முகமது மாலிக் ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், அடுத்தக்கட்டமாக முன்னெடுத்துச் செல்லும் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டன.

பின்னர், தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA) புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தேர்வை தாஜுல் இஸ்லாம் சங்க துணைத்தலைவரர் பி.எம்.கே தாஜூதீன், கே.எம்.எஸ் நிஜாமுதீன் ( மீடியா மேஜிக்) ஆகியோர் நடத்தினர். இதில், தலைவராக ஐ. மக்ஸின், துணைத் தலைவராக எச்.பெரோஸ், செயலாளராக எச். சபீர் அகமது, துணைச் செயலாளராக கே. அஃப்ரீத்கான், பொருளாளராக கே.கே அசாருதீன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், மஹல்லா நிர்வாகிகள், இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.