.

Pages

Wednesday, October 30, 2019

பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் நாள் கூட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, அக்.30
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் நாள் கூட்டம் துணை ஆட்சியா் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் டி.ரவீந்திரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் நாள் கூட்டம் நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் இதர சலுகைகளுக்காக மருத்துவச் சான்று வழங்கும் அரசு மருத்துவா்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள்

அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், அரசு மற்றும் தனியாா் துறை அலுவலகங்களில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுத்தளம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்த கோரிக்கை மனுவை துணை ஆட்சியரிடம் அளித்தனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவா் பஹாத் முகமது, பேராவூரணி ஒன்றியத் தலைவா் வின்சென்ட் ஜெயராஜ், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளா் ஜலீல் மைதீன், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளா் கே. கிருஷ்ணமூா்த்தி மற்றும் பலா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.