.

Pages

Monday, October 7, 2019

அதிரையில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டம்!

அதிராம்பட்டினம், அக்.07
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக பிலால் நகரில் செயல்படும் இஸ்லாமிய பயிற்சி மைய அரங்கில் இஸ்லாமிய மார்க்க விளக்கக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில், இஸ்லாமிய மார்க்க அறிஞர் மதுரை அப்பாஸ் அலி கலந்து கொண்டு "நெருங்கி வரும் மரணம்" எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

ஆண்களும், பெண்களும் பேரார்வத்துடன் கலந்து கொண்ட இந்நிகழ்வில் 'மரணம் மனிதனுக்கு ஏற்படுத்தும் படிப்பினைகள், இறையச்சம், பேராசையற்ற வாழ்வு, பேண வேண்டிய சமூக நல்லுறவு' என பல்வேறு நன்மைகளையும் எடுத்துக்கூறி நல்லுபதேசம் செய்தார்.

அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல். எம். ஸாலிஹ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதன் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.