.

Pages

Friday, October 11, 2019

அதிராம்பட்டினத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

அதிராம்பட்டினம், அக்.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் உத்தரவின் பேரில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர். அண்ணாதுரை, அதிராம்பட்டினம் பேரூர் துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், மருத்துவ அலுவலர் டாக்டர் சோம சுந்தரம் தலைமையில், மருத்துவக்குழுவினர் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள், சுய உதவிக்குழு பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோருக்கு, மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர். இதில், காய்ச்சல் பாதிப்பு உள்ளனவா என்றும், கண், இரத்தம், இரத்த அழுத்தம், உடல் எடை ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.