.

Pages

Monday, October 7, 2019

அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன் மறைவுக்கு இரங்கல் கூட்டம்!

அதிராம்பட்டினம், அக்.07
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் (வயது 65) அவர்கள், கடந்த (செப்.25) அன்று அதிராம்பட்டினத்தில் காலமானார்.

இவரது மறைவையொட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் ஏ.சேக் அப்துல்லாஹ், இணைச் செயலாளர் மு.காதர் முகைதீன் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர்.

முன்னதாக, அக்கட்சியின் மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது வரவேற்றார். முடிவில், அக்கட்சியின் அதிரை பேரூர் துணைச் செயலாளர் அபூபக்கர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, கட்சி அலுவலகத்தில் உள்ள முஸ்லீம் லீக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. மேலும், மறைந்த எஸ்.எஸ்.பி நசுருதீன் மறுமை வாழ்வு சிறக்க அக்கட்சியினர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.