.

Pages

Monday, October 21, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 21
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல்துறை சார்பில், 'சுற்றுச்சூழலின் நிலையான வளர்ச்சி' என்ற தலைப்பில் கருதரங்கம் நிகழ்ச்சி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து  தொடங்கி வைத்துப் பேசினார்.   

சிறப்பு விருந்தினராக  அண்ணாமலைப் பல்கலைக்கழக விலங்கியல் துறை  பேராசிரியர், எஸ். செந்தில்முருகன் கலந்துகொண்டு பேசுகையில்; 'சுற்றுச்சூழல் நிலையான வளர்ச்சி ஏற்படவேண்டுமெனில், புவி வெப்பமடைதல், காடுகள் அழித்தல், மாசுபடுதல், மண் அரிப்பு போன்றவற்றைத் தடுக்கவேண்டும். புதுப்பிக்கத்தக்க வளங்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்' என்றார். 

முன்னதாக, கல்லூரி விலங்கியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ. அம்சத்  வரவேற்றுப் பேசினார். பேராசிரியர் ஒ. சாதிக் விருந்தினர் அறிமுகவுரை ஆற்றினார். நிறைவில், பேராசிரியர் கே. முத்துக்குமரவேல் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் வி. கானப்பிரியா, ஏ. மகாராஜன்,  ஜெ.சுகுமாரன், என்.வசந்தி, மல்கர் ஒலி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.