அதிரை பேரூராட்சியின் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக மொத்தம் 34 பேர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.
வளர்ச்சியடைந்து காணப்படும் அதிரை பகுதிக்கு இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றாலும், நகர் முழுதும் குமியும் குப்பை கூளங்களை தினமும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர் என்பதையும் மறுக்க இயலவில்லை. தினமும் அதிகாலையில் பணியை ஆரம்பிக்கும் இவர்கள் இரு குழுவினர்களாக பிரிந்து இரு வேறு பகுதிகளில் வலம்வருகின்றனர்.
இவ்வாறு அதிரையின் சுகாதார முன்னேற்றத்திற்காக பாடுபடும் இவர்களுக்கு பணியின் போது ஏற்படும் நெருக்கடிகள் என்ன ?, பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பு உள்ளதா ?, குப்பை கூளங்களை அல்லும்போது ஏற்படும் சங்கடங்கள் என்ன ?, பணிக்கேற்ற போதிய சம்பளம் வழங்கப்படுகிறதா ? மருத்துவ உதவி ஏதேனும் உண்டா ?, பணியின் போது பாதுகாப்பு சாதனங்கள் ஏதேனும் அணிகின்றீர்களா ? என்பது குறித்து அதிரை நியூஸ் சார்பில் நேரடியாக இரு வேறு களத்திற்கு சென்று துப்புரவு தொழிலாளர்களை சந்தித்து நேர்காணலை நடத்தினோம்...
இதோ அவர்களின் குமுறல்....
நேர்காணலின் போது நேரடியாக கண்காணித்து கொண்டிருந்த அருமை நண்பர் அஜ்வா நெய்னா இந்த பணியாளர்களின் பேச்சை கேட்டவுடன் இவர்கள் படும் துயரத்தைகண்டு வேதனையடைந்தார். துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் 'டீ' ஆர்டர் செய்தார். இவர் செய்யும் சிறு உதவியாக இருந்தாலும் அருகில் நின்றோரை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
ReplyDeleteஎன்னவா இருந்தாலும் நமது வீட்டு குப்பை கூளங்களை அகற்ற உதவுபவர்கள் அல்லவா இவர்கள் !
மக்கள் தொகை பெருக்கம் அதிகம் கொண்ட நமதூரில், மக்களின் பயன்பாடு அதிகம் என்பதால் அங்கங்கே கழிவுகள் தேங்கி கிடப்பதை நாம் கண்ணால் பார்க்கலாம். மக்கள் குப்பை கூளங்களையும், கழிவு பொருட்களையும், ஒரு இடத்தில் கொட்டுகிறார்கள என்றால் இல்லை. சாலையில் கொட்டிவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொது மக்கள், பல சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. சரி குப்பை வண்டி வருதுல அதிலயாவது கொட்டுகிரிர்களா என்றால் அதுவும் இல்லை. துப்பரவு செய்து விட்டு சென்றபின் குப்பையே கொட்டுகிரிர்கள். துப்பரவு தொழிலாளியே தப்பு சொல்ல கூடாது. எல்லா தப்பும் மக்களாகிய நம்ம மீது தான். நாம் குப்பைகளை ஒரு இடத்தில் கொட்ட கற்றுகொள்ளவேண்டும்.
ReplyDelete