சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் தா. பாண்டியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிரை லயன் சங்க நிர்வாகிகள் சாரா அஹமது, பேராசிரியர் செய்யது அஹமது கபீர், சாகுல் ஹமீது, பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், அப்துல் ஹமீது, ஜலிலா முகைதீன், மேஜர் முனைவர் கணபதி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் முதன் முதலாக வேஷ்டி அணிந்து பங்கேற்ற முதல் விழா என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, March 4, 2014
லயன் சங்க விழாவில் அதிரையர்கள் பங்கேற்பு !
சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் தா. பாண்டியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிரை லயன் சங்க நிர்வாகிகள் சாரா அஹமது, பேராசிரியர் செய்யது அஹமது கபீர், சாகுல் ஹமீது, பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், அப்துல் ஹமீது, ஜலிலா முகைதீன், மேஜர் முனைவர் கணபதி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் முதன் முதலாக வேஷ்டி அணிந்து பங்கேற்ற முதல் விழா என்பது குறிப்பிடத்தக்கது.
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
லயன் சங்கத்தால் சமுதாயத்திற்கு என்ன நன்மை?
ReplyDeleteயார் பிற மத கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவராவார் (நபிமொழி)
போட்டோவை பார்த்தால் வேஸ்டிகான விளம்பரம்போல் தெரிந்தாலும் பேராசியர் அப்துல் காதர் கம்பீரமான தோற்றம் -சலூட்
ReplyDelete//இவர்கள் அனைவரும் வேஷ்டி அணிந்திருந்தது பார்ப்போரை கவர்ந்து இழுத்தது.//
ReplyDeleteஅதிரை நியுஸ் நிர்வாகத்திற்கு செய்திகளை வெளியிடுங்கள் ஆனால் மேற்கண்ட மிகை படுத்துதல் வேண்டாம் .
இதேபோல் தி மு க மாநாட்டிலும் அதிரையர்கள் வேஸ்ட்டி .....பதவிக்கும் பணத்திற்கும் எல்லா வேசமும் போட தயாராகி வருகின்றனர் நமது சமுதாய மக்கள்.இஸ்லாமியர்களுக்கு என்ற தனி அடையாளம் எங்கு மாறுகின்றது அங்கெ கொள்கைகளும் மாறிவிடும் ....அஸ்தாஹ்பிருல்லாஹ் ....... இதெல்லாம் இஸ்லாமியர்களை மற்றவர்களது வலைக்கு நிர்பந்திக்கும் செயல்.
திரு. தா. பாண்டியன் படித்துக் கொண்டு இருப்பது நான் அன்பளித்த நான் எழுதிய மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? நூல்.
ReplyDeleteதா. பாண்டியனை அறிமுகப் படுத்தி பேராசிரியர் அப்துல் காதர் பேசியதன் ஒரு பகுதி
தமிழகத்துக்கு அறிமுகமே தேவைப்படாத ஒருவரைப் பற்றி அறிமுகம் செய்து பேசும் பொறுப்பு எனக்கு தரப்பட்டு இருக்கிறது.
திரு. தா. பா. அவர்களை தமிழகத்துக்கு அறிமுகம் செய்வது பெற்ற தாய்க்கு குழந்தையை அறிமுகம் செய்வதற்கு ஒப்பானது என்று கருதுகிறேன்.
ஆனாலும் , ஏற்றுக் கொண்ட பணியை செய்தாக வேண்டும் என்கிற கடப்பாடு உங்கள் முன் உடையோனாய் நின்றுகொண்டு இருக்கிறேன்.
தோழர் தா. பா. என்று நம் அனைவராலும் அழைக்கப்படும் திரு தா. பா. அவர்களைப் பற்றி முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லிவிடுகிறேன். சென்னை மாநகரத்தின் போயஸ் தோட்டம் இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தைக் கவர்ந்து இருக்கிறது. அந்த போயஸ் தோட்டத்தின் நீண்ட நெடும் சுவர்களின் கேட்டின் பூட்டுக்களின் தாழ்ப்பாள் இந்த தா. பா என்று பெயர் சொன்னால் அலிபாபா குகை திறப்பதுபோல் அந்தக் கணமே விலகிவிடும். பலருக்குப் போடப்படும் தாழ்ப்பாள் இந்த தா. பாவுக்கு என்றுமே இல்லை. அப்படியே தாழ்ப்பாள் போடபட்டாலும் ஒரு புறா போலப் பறந்து அந்த போயஸ் தோட்டத்தின் சுற்றுச் சுவர்களைத்தாண்டியும் பறக்கும் சுதந்திரம் இந்த தா. பா அவர்களுக்கு உண்டு. . அப்படி பறந்து செல்லும் இந்தப் புறா வெண்புறாவல்ல; சிகப்புத் துண்டு போர்த்திய செம்புறா.
மிகச் சுருக்கமாக தோழர் தா. பா. அவர்களைப் பற்றிய வாழ்வுக்குறிப்புகளைச் சொல்லப் போனால் 25/9/1932 அன்று உசிலம்பட்டி அருகே உள்ள கீழவெள்ளை மலைப் பட்டி என்று பெயர் படைத்த ஒரு கிராமத்தில் , ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். மிகவும் இளமையிலேயே தனது தாயை இழந்துவிட்டு பெரியம்மா அவர்களால் வளர்க்கப் பட்டவர்.
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று பின் அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப் பட்டார். இவருடைய சகோதரரான தா. செல்லப்பா அவர்களும் ஒரு புகழ்பெற்ற பொருளாதாரப் பேராசிரியராக பல கல்லூரிகளில் பணியாற்றியவர் என்கிற தகவல் ஒரு கல்வியாளர்களின் சூழலில் வளர்ந்த தா. பா அவர்களை நமது கண் முன் நிறுத்துகிறது.
பொதுவுடைமை சிந்தனைகளின் ஜீவனாக இருந்த தோழர் பி. ஜீவா அவர்கள் தோற்றுவித்த தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின் முதல் செயலாளர் ஆகப பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றவர். ஜனசக்தி நாளிதழின் பொறுப்பாளராக இருப்பவர். இன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர். 1989 மற்றும் 91 ஆகிய இரு முறைகள் இந்திய பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மிகவும் அதிர்ச்சி தரும் செய்தியாக, ராஜீவ் காந்தி கொல்லப் பட்டபோது அவருடன் இவரும் சேர்ந்து கொல்லப்பட்டு விட்டார் என்று ஆரம்பத்தில் காவல் துறையால் அறிவிக்கப் பட்டு பின்னர் அது தவறு என்று அறிவிக்கபப்ட்டு அவருடைய குடும்பத்தை தவிக்கவிட்டு உயிர் மீண்டவர். மறுபிறவி எடுத்தவர். அந்தக் கொடிய விபத்தில் கடுமையாக காயம்பட்ட ஒரே அரசியல் தலைவர். மற்றவர்கள் விபத்து நடக்கும்போது சிகரெட் பிடிக்கப் போய்விட்டதாக சொல்கிறார்கள். கடுமையான காயம்பட்டு இரத்தம் சிந்தும் படுக்கையில் கிடந்தது நினைவு வந்ததும் இவர் கேட்ட முதல் கேள்வி ராஜீவுக்கு ஒன்னும் ஆகலையே! நன்றாக இருக்கிறாரா என்பதுதான் என்று இவர் மகள் சொல்கிறார். இவர் அந்தக் கேள்வியைக் கேட்ட நாளில் ராஜீவுடைய அஸ்தியை கங்கையில் கரைத்துவிட்டார்கள்.
பல தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்- கேட்பவர்களின் நாடித்துடிப்பை அறிந்து பேசுகின்ற அருமையான பேச்சாளர் – வழக்கறிஞர் இப்படி இவரின் தனிப்பட்ட வாழ்வை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ReplyDeleteஆனால் இவரது எளிமை! இனிமை! கனிவு! பணிவு! துணிவு ! ஆகிய குணங்களால் இன்றைய இந்தியாவில் விரல்விட்டு எண்ணத் தகுந்த தன்னலமின்றி பொதுப் பணியாற்றும் இயல்பான குணத்தால் என்றென்றும் கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவர் நெஞ்சிலும் இடம் பெற்றவர்.
எதற்கும் கலங்காத இரும்பு இதயம் படைத்த தா. பா அவர்களை கண்ணீர் விட்டுக் கதற வைத்த நிகழ்ச்சி தோழர்கள் பாலதண்டாயுதமும் , மோகன் குமாரமங்கலமும் மறைந்த போது என்று கேள்விப்படுகிறோம்.
நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர். திரு. தா. பா. அவர்களைப் பற்றி என்னுடைய ஒரு கருத்தை இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
தத்துவவாதிகள் மார்க்சீயம் பேசினார்கள். ஏங்கெல்ஸ் உடைய பொருளாதாரம் என்றார்கள். லெனினைப் பற்றி பேசினார்கள். ஆனால் திருவள்ளுவரை அவர்கள் தீண்டவில்லை. கம்பர் வீட்டை அவர்கள் எட்டிக் கூட பார்க்கவில்லை. பாரதியையும் பாரதிதாசனையும் யாரோ அன்னியர்களைப் பார்ப்பது போல் பார்த்தார்கள். ஆனால் தோழர் ஜீவா அவர்கள் பொது வாழ்வுக்கு வந்த பிறகுதான் பொதுவுடமைக் கொள்கைகளைப் பரப்ப வள்ளுவனும் கம்பனும் பாரதியும் பாரதிதாசனும் ஜீவனாகத் திகழ்வார்கள் என்று எடுத்துக் காட்டினார். அந்த ஜீவாவின் வழிவந்த நமது தா. பா அவர்களும் எந்த அளவுக்கு பொது உடமைக் கொள்கைகளைப் பேசுகிறாரோ அதே அளவுக்கு தமிழ் இலக்கியங்களையும் கூடவே ஆங்கில இலக்கியங்களையும் அள்ளித்தரும் ஆற்றல் படைத்தவர் என்பது எங்களைப் போன்றோருக்கு மிகவும் மகிழ்வைத் தருவதாகும்.
ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனுக்குப் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள் என்று கூறுவதற்கு ஏற்ப திரு தா.பா. அவர்களின் வெற்றியின் பின்னணி யில் திருமதி ஜாய்ஸ் பாண்டியன் இருக்கிறார் என்பதை நான் சொன்னால் அது வெறும் வார்த்தையல்ல என்பதை திரு தா. பா. அவர்கள் பூக்கின்ற புன்முறுவலே அவரது ஒப்புதல் வாக்குமூலம் என்பதைச் சொல்லி இப்படி ஒரு பெருமகனை அறிமுகப் படுத்தும் வாய்ப்புக்கு நன்றி கூறி முடித்துக் கொள்கிறேன்.