எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சி ஆட்சியில் அமரும் என்ற எதிர்பார்ப்பில் நாடுமுழுதும் எதிர்பார்த்துகொண்டிருக்கும் இவ்வேளையில் ஒவ்வொரு கட்சிகளும் தனது வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றன. இதில் சில கட்சிகள் தேர்தல் தேதி அறிவிப்பு செய்யும் முன்பே பிராச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை மாநில கட்சிகளின் பங்கு பிரதானமாக காணப்பட்டாலும் 4 முனை போட்டிகள் நிச்சயம் என்றளவில் உள்ளது. கட்சிகளிடேயே கடைசி கட்ட பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் உடன்பாடுகளால் புதிய கூட்டணிகள் ஏற்பட்டு இந்த எண்ணிக்கைகள் கூடவோ அல்லது குறையவோ வாய்ப்பும் இருக்கிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் பிராதன இரு மாநில கட்சிகள் நேரடியாக மோதிக்கொள்ள இருப்பதாக பரப்பரப்பாக பேசப்படும் இந்த நேரத்தில் இந்த இரு கட்சிகளோடு மோத இருக்கிறார் அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் உமர் தம்பி மரைக்காயர். சமூக ஆர்வலரான இவர் நாட்டில் அன்றாடம் நிகழக்கூடிய அரசியல் நிலவரங்களை தெளிவாக அறிந்து வைத்திருப்பவர்.
பாராளுமன்ற தேர்தலில் இவர் போட்டியிடுவதால் எந்தளவு இவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதை இவரோடு நெருங்கிய தொடர்புடையவர்களிடம் பேசினோம்...
சிறுபான்மை இனத்தை சேர்ந்தவனரான இவர் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில மாதங்களாக களபணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக குழு அமைத்து சுற்றுவட்டார பகுதிகளில் வாழும் கிராம பஞ்சாயத்தார்கள், ஜமாத்தார்களை சந்தித்து ஆதரவு கோரிவருகின்றோம் என்றும், சென்ற இடமெல்லாம் இவரின் அணுகுமுறையைக்கண்டு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதாக கூறுகின்றனர். இத்தொகுதியில் போட்டியிட உள்ள பிராதான முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்பது மட்டும் நிச்சயம் என்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் கருத்து என்ன ?
தஞ்சை பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு கணிசமான அளவில் சிறுபான்மை இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வேட்பாளர்களின் வெற்றி / தோல்விகளை நிர்ணயிக்ககூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கோரிக்கைகளின் அடிப்படையில் ஒன்றிணைந்து வாக்களித்தால் தாங்கள் முன்னிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்கின்றனர்.
மேலும் இப்பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்களின் முக்கிய கோரிக்கையாக கிடப்பில் போடப்பட்ட திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம், சிறுபான்மை இன மக்களுக்கு கல்வியில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உயர்த்தி கொடுத்தல் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வாக்குறுதி தருவோருக்கு ஓட்டு நிச்சயம் என்கின்றார்கள்.
அதிரை நியூஸ் குழு
ஆம் ஆத்மி உமர்தம்பி அவர்களைக்கொண்டு ஒற்றுமையையும் தொகுதியில் நல்ல முன்னேற்றமும் கிடைக்குமென்று இருந்தால் அவர்களுக்கு இறைவன் வெற்றியை நாடி வைப்பானாக!
ReplyDeleteஆள்வது வேறு கட்சியாக இருந்து , MPயாக மட்டும் ஆம் ஆத்மி இருக்கும் பட்சத்தில் அதனால் தொகுதிக்கு வரவேண்டியதில் பாரபட்சம் காட்டும் நிலை வரும் என தெரிந்தால் தவிர்ப்பது நலம்.
நம்ம மக்கள் ஓட்டு போட்டாலே அதுவே பெரிய வெற்றி எனலாம்.
ReplyDelete//மேலும் இப்பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்களின் முக்கிய கோரிக்கையாக கிடப்பில் போடப்பட்ட திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம், சிறுபான்மை இன மக்களுக்கு கல்வியில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உயர்த்தி கொடுத்தல் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வாக்குறுதி தருவோருக்கு ஓட்டு நிச்சயம் என்கின்றார்கள்//
ReplyDeleteயாருங்க சொல்றது....டியர் அட்மின்