.

Pages

Sunday, June 22, 2014

பட்டுக்கோட்டையில் தமுமுகவின் 112வது ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் !

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செயல்படுத்தி வரும் பல்வேறு சமூக சேவைகளில் ஆம்புலன்ஸ் சேவையும் ஒன்று. அனைத்து சமூதாய மக்களின் பாராட்டுதலையும் - வரவேற்பையும் பெற்று வரும் இந்த சேவையை பல்வேறு ஊர்களுக்கு விரிவு படுத்தப்பட்டும் வருகின்றது. இதற்காக தயாள மனம் படைத்த பலர் நிதிஉதவி செய்தும் வருகின்றனர்.

அதிரை அருகே உள்ள பட்டுக்கோட்டை பகுதிக்கு புதிதாக ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கி கிளையினரிடம் ஒப்படைப்பது என தமுமுகவின் முடிவையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாகன டீலரிடம் முன்பதிவு செய்யப்பட்டது. ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள இந்த வாகனத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதன் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமுமுக நிர்வாகிகளிடம் ஆம்புலன்ஸ் வாகனம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பட்டுகோட்டையில் அழகிரி நினைவரங்கில் நடைபெற்ற அர்பணிப்பு விழா - சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் தமுமுகவின் மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ், மமக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி, மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் K. ராவுத்தர்சா,  தலைமை கழக பேச்சாளர் திருச்சி A. ரபீக் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.

இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாக்டர் ஹாஜி M. அசரப் அலி ( பராக்கா )அவர்கள் ஆம்புலன்சின் சாவியை  தமுமுகவின் மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் ஒப்படைத்தார்.

முன்னதாக வரவேற்புரையை தமுமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை S. அஹமது ஹாஜா நிகழ்த்தினார்.

இவ்விழாவில் மாவட்ட - ஒன்றிய - கிளை நிர்வாகிகள் ஆகியரோடு பட்டுகோட்டை, அதிரை, மதுக்கூர், முத்துபேட்டை புதுபட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் பேராவூரணி உள்ளிட்ட ஊர்களின் தமுமுக- மமக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    வாழ்த்துகள் பாராட்டுகள்

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.