.

Pages

Sunday, June 8, 2014

ஜூன் 8 : அதிரைக்கடல் ! [ பேசும் படங்கள் ]

கடல்களையும், கடல்சார் உயிரினங்களையும் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 8ம் தேதி, சர்வதேச கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'கடலை காக்க அனைவருக்கும் அதிகாரம்' என்பது இந்த ஆண்டு கடல் தினத்தின் மையக்கருத்தாக இருக்கிறது.

இன்று கடல் தினமாக இருப்பதால் அதிரை கடல் மற்றும் அப்பகுதியில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் குறித்தும் புகைப்படங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்வோம்.














10 comments:

  1. இருந்தாலும் அதிரை நியுஸ் காரர்களின் குசும்பு அதிகம் தான் வகை வகையா மீன்களை படத்தில் போட்டு வெளிநாட்டு வாழ் அதிரையர்களை இப்படியா உசுப்பு எத்துறது........

    கொடுவாகண்ணு மீனு இருக்குதே அதை வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் கூட கொஞ்சம் புளி சேர்த்து மல்லித்தூள் மஞ்சள்தூள் சேர்த்து ஆக்கி அப்படியே சுடசுட சோற்றுடன் முருங்கை கீரை கூட்டு புளியாணம் ......ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அந்த மாதிரி இருக்கும் .

    ReplyDelete
  2. படம் போட்டு எல்லாத்தையும் காட்னிங்க.. கடல் ஓரத்திலே நடக்கிற சூதாட்டதை காட்டலியே

    ReplyDelete
  3. இன்றைக்கு எட்டாம் தேதியோ என்னவோ, மீனின் படங்கள் அருமைங்க.

    ReplyDelete
  4. Postmean appo negka
    postmean vealaikku
    layakku ella?
    date thappa potda...............................
    ...............????????????

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  6. தேவையில்லாத ஏதெதுக்கோ தினங்கள் வைத்துக் கொண்டாடும்போது ''கடல்'' தினம் என்பது அவசியமானதே !

    இனி கடல் தினத்தையும் நினைவுகூறுவோமாக.!

    ReplyDelete
  7. நம்மவூர் கடல் சார்ந்த தொழிலை எத்தனை பேரு செய்கிறார்கள்? வெளி மாநிலம் , மாவட்டத்திலிருந்து லாரிகள் இங்கே உறுப்பத்தியாகும் உப்பை வாங்கி வியாபாரம் செய்கிறார்கள் ஆனால் நம்மவர்கள் லட்ச பணம் ஏஜண்டிடம் கொடுத்து வெளிநாட்டில் லேபராக வேலை பார்க்கிறார்கள். எல்லாம் வெளிநாட்டு மோகம் என்றே கூறலாம்

    உப்பளங்களை பண்ணைகளாக மாற்றியதால் உறுபத்தியும் குறைந்து விட்டது பண்ணையாளர்கள் இப்போ கடலில் (ஓரமாக) வேலி அமைத்து நண்டு வளர்க்கிறார்கள் என்பது குருப்பிடதக்கது.

    ReplyDelete
  8. புகைப்படங்கள் அருமை,
    அதிலும் வரிவரியாய் உப்புகள், கடல் தண்ணீர் பாசியுடன் கூடிய படங்கள், மிகவும் அருமை.

    எல்லா தொழிலுக்கும் முதலாளி என்று மனிதர் ஒருவர் இருப்பார்,,, ஆனால் இந்த கடல் சார்ந்த தொழிலுக்கு மட்டும் தான் ஆண்டவன் தான் முதலாளி.

    ReplyDelete
  9. புகைப்படங்கள் அருமை,
    வரிவரியாய் உப்புகள், கடல் தண்ணீர் பாசியுடன் கூடிய படங்கள், மிகவும் அருமை.

    ReplyDelete

  10. அதிரைக் கடலின் அலையைக் காண
    ஆட்டோ ஏறிச் சென்றோமே
    குதிரைப் பாய்ச்சல் போலக் கிளம்பிக்
    குதித்துச் சென்ற(து) ஆட்டோவும்.

    மாலை மதியக் குளிரைப் பெற்று
    மனத்துக் கினிய உணர்வோடு
    சாலை கடந்து, சோலை புகுந்து
    சரியாய்க் கடலின் கரைவந்தோம்.

    கரையை மோதும் அலையைக் கண்டு
    காலைக் கழுவ ஆமினம்மா
    தரையில் நின்று தாவிச் சென்று
    தண்ணீ ருக்குள் கால்விட்டாள்.

    வங்கக் கடலின் சீற்றத் தாலே
    வந்த சுனாமிப் பேரலையின்
    பங்கம் மனத்தில் வரவே வாப்பா,
    “பார்த்துப் போம்மா!” என்றார்கள்.

    சின்னக் குட்டி பாத்திம் மாவின்
    சிரித்த முகமோ மாறிற்று
    கன்னத் தில்கை வைத்துக் கொண்டு
    கடலைப் பார்த்து வியப்புற்றாள்!

    சுண்டல் பொதியைக் கண்டான் ஹாமிது
    சூடாய்த் தின்ன விரும்பியவன்
    சண்டை பிடித்து வாங்கித் தின்று
    சாந்திக் கடலில் இறங்கினனே.

    இருட்டு வருமுன் வீடு திரும்ப எண்ணங் கொண்டார் எல்லாரும் திருட்டு நரிகள் நண்டு பிடிக்கத் தேடி வருமுன் திரும்பினரே!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.