சிப்பாய் பொதுப்பணிக்கு 17 வயது முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் 10 வகுப்பில் 45 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று ஒவ்வொரு பாடத்திலும் 33 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிப்பாய் டிரேட்ஸ்மேன், ஹவுஸ் கீப்பர், மெஸ் கீப்பர் பணிகளுக்கு 17 வயது முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தகுதி உடையவர்கள் ஆவர்.
மேலும் சமையல்காரர்கள், சலவைத் தொழிலாளி, முடி திருத்துபவர், உணவு பரிமாறுபவர், தச்சு கலைஞர்கள், உலோக தொழில் கலைஞர், கட்டிட தொழில் கலைஞர் மற்றும் அனைத்து பணிகளுக்கும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அவரவர் தொழிலில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிப்பாய் கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு 17 வயது முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் 12-ம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று ஒவ்வொரு பாடத்திலும் 40- சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்த ராணுவ ஆள்சேர்ப்பில் பட்டப்படிப்பு படித்தவர்களும் கலந்து கொள்ளலாம். ஆனால் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை கொண்டே தேர்வு செய்யப்படுவர்.
சிப்பாய் டெக்னிக்கல் பணிகளுக்கு வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளிலும், சிப்பாய் பொதுப்பணிக்கு 12 மற்றும் 13-ந் தேதிகளிலும், சிப்பாய் டிரேட்ஸ்மேன் பணிக்கு 14 மற்றும் 15-ந்தேதிகளிலும், சிப்பாய் கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணிகளுக்கு 15 மற்றும் 16–ந் தேதிகளிலும் ஆள்சேர்ப்பு நடைபெறும்.
தஞ்சாவூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், காரைக்கால் ஆகிய 14 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கவுள்ளனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சரியான நேரம்.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com