பேராவூரணி கடைவீதியில் கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது கெட்டுப்போன ,அழுகிய ,கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என் .சுப்பையன் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தட்சணாமூர்த்தி அறிவுரையின் பேரில்,பேராவூரணி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரமா.ராமநாதன் ,சேதுபாவாசத்திரம் உணவு பாதுகாப்பு ஏ.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நகரில் உள்ள அனைத்து பழக்கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது சுமார் 500 கிலோ எடையுள்ள கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் கெட்டுப்போன பழங்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது .இனி இதுபோல் கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.
பூக்கொல்லை ,பேராவூரணி பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்து கூறிய உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ,"கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதன் மூலம் வாந்தி ,வயிற்றுப்போக்கு ,வயிற்று வலி ,செரிமான பிரச்சினைகள் ,கல்லீரல் பாதிப்பு போன்ற உடல் பாதிப்புகள் உண்டாகலாம் .குழந்தைகளுக்கு அதிகமான ஆபத்தை ஏற்படுத்தலாம் .எனவே கூடிய வரை பழங்களை நன்றாக தண்ணீரில் ஊற வைத்து கழுவி உட்கொள்ளவேண்டும்" என்றார்.
மேலும் கல் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் ப.தியாகராஜன் ,மேற்பார்வையாளர் சந்தனராஜன் ,சுகாதார ஆய்வாளர்கள் முருகானந்தம் ,இராமநாதன் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர் .
செய்தி எஸ்.ஜகுபர்அலி
பேராவூரணி.
ஆய்வின் போது கெட்டுப்போன ,அழுகிய ,கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என் .சுப்பையன் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தட்சணாமூர்த்தி அறிவுரையின் பேரில்,பேராவூரணி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரமா.ராமநாதன் ,சேதுபாவாசத்திரம் உணவு பாதுகாப்பு ஏ.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நகரில் உள்ள அனைத்து பழக்கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது சுமார் 500 கிலோ எடையுள்ள கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் கெட்டுப்போன பழங்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது .இனி இதுபோல் கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.
பூக்கொல்லை ,பேராவூரணி பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்து கூறிய உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ,"கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதன் மூலம் வாந்தி ,வயிற்றுப்போக்கு ,வயிற்று வலி ,செரிமான பிரச்சினைகள் ,கல்லீரல் பாதிப்பு போன்ற உடல் பாதிப்புகள் உண்டாகலாம் .குழந்தைகளுக்கு அதிகமான ஆபத்தை ஏற்படுத்தலாம் .எனவே கூடிய வரை பழங்களை நன்றாக தண்ணீரில் ஊற வைத்து கழுவி உட்கொள்ளவேண்டும்" என்றார்.
மேலும் கல் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் ப.தியாகராஜன் ,மேற்பார்வையாளர் சந்தனராஜன் ,சுகாதார ஆய்வாளர்கள் முருகானந்தம் ,இராமநாதன் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர் .
செய்தி எஸ்.ஜகுபர்அலி
பேராவூரணி.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.