.

Pages

Sunday, June 22, 2014

அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் வைத்திலிங்கம் பங்கேற்பு !

பேராவூரணி ஜூன்-22;            
பேராவூரணி அருகேயுள்ள மாவடுகுறிச்சி ஊராட்சியில் தமிழக அரசின் சீரிய நலத்திட்டமான விலையில்லா மிக்ஸி,கிரைண்டர் ,ஃபேன் வழங்கும் விழா நடைபெற்றது .
               
சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாடாகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கி விழா சிறப்புரையாற்றினார்.
                   
முன்னதாக ஊராட்சி மன்றத்தலைவர் மு.பாரி அழகப்பன் வரவேற்றார்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழ.செல்லையா ,ஒன்றியப்பெருந்தலைவர் சாந்தி அசோக்குமார் ,ஒன்றியக்கவுன்சிலர் ஜெய்சங்கர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மா.கோவிந்தராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.சுப்பையன் விழா தலைமை உரையாற்றினார்.
                       
அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தனது உரையில் ,"தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் ஒவ்வொரு துறையிலும் வெளிநாடுகளுக்கு இணையாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 15 லட்சம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார் .வறுமை ஒழிக்க வேண்டும் .அதற்கு கல்லாமை இல்லாத நிலை வேண்டும் என முடிவு செய்து மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு,புத்தகங்கள் ,மிதிவண்டிகள் ,மடிக்கணினிகள் போன்றவற்றை அம்மாவின் அரசு வழங்குகிறது .அதே போல இல்லத்தரசிகள்
பயன்பெறும் வகையில் விலையில்லா மிக்ஸி ,கிரைண்டர் ,ஃபேன் ஆகியவற்றை அம்மாவின் அரசு வழங்கி வருகிறது.அரசின் நலத்திட்டங்களை பெற்று ,இந்த அரசிற்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் " இவ்வாறு உரையாற்றினார் .
               
விழாவில் சிறப்பு திட்ட அமலாக்க தனித்துணை ஆட்சியர் குணசேகரன் ,பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் த.முருகேசன் ,வட்டாட்சியர் இரா.கிருஷ்ணன் ,வருவாய் ஆய்வாளர்கள் ஞானமணி,விஜயராகவன் ,கிராம நிர்வாக அலுவலர் ராஜா,அதிமுக ஒன்றியச்செயலாளர் உ.துரைமாணிக்கம் ,ஒன்றியப்பொருளாளர் அசோக்குமார் ,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குழ.செ.அருள்நம்பி ,,நாடங்காடு கு.அருணாசலம் ,நகரச்செயலாளர் வி.என்.பக்கிரிசாமி ,தொ.வே.கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.கே.பழனிவேலு ,களத்தூர் வி.ராஜா,தென்னங்குடி எல்.வைரவன் ,ஆர்.பி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தெய்வானை வைத்திலிங்கம் நன்றி கூறினார்.  
         
மாவடுகுறிச்சி ஊராட்சியில் 515 பேரும் ,நாடியம் ஊராட்சியில் 580 பேரும் ,மருங்கப்பள்ளம் ஊராட்சியில் 570 பேரும் விலையில்லா பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
             
சனிக்கிழமை மட்டும் மாவட்டத்தில் பருத்திக்கோட்டை ,ஒக்கநாடு கீழையூர் ,கோவிலூர் ,தெலுங்கன்குடிக்காடு,கரம்பயம் ,ஆலத்தூர் ,தம்பிக்கோட்டை வடக்கு ,நாடியம் ,மருங்கப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற விலையில்லா பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டார் .செய்தி மக்கள் தொடர்புத்துறை மாவட்ட அலுவலர் பாண்டியன் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

செய்தி : எஸ்.ஜகுபர்அலி ,
பேராவூரணி.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    நம்ம ஊரு என்னாச்சு?
    அல் பாத்தியாவா?

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.