.

Pages

Saturday, June 28, 2014

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் நோன்பு நாளை முதல் ஆரம்பம் !

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறை கமிட்டியினரிடமிருந்து நேற்று ரமலான் மாத நோன்பின் பிறைக்கான அறிவிப்பை அடுத்து நாளை [ 29-06-2014 ] ஞாயிற்றுக்கிழமை முதல் நோன்பு ஆரம்பமாகிறது.

செய்தி கேள்விப்பட்டதும்  மக்கள் மகிழ்ச்சி ததும்ப கூட்டமாக திரண்டு நண்பர்களையும் உறவினர்களையும் மற்றும் சக பணியாளர்களையும் சந்தித்து சலாம் கூறி ரமலான் வாழ்த்தினை மனம் மகிழ உள்ளம் குளிர பகிர்ந்து கொண்டு வருகின்றனர். நேரில் சந்திக்க முடியாதவர்களிடம் அலைபேசியின் ஊடலாக செய்தியினை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

தற்போது துபாயில் நிலவிவரும் கடும் சூட்டையும், வியர்வையையும் பொருட்படுத்தாது நோன்பிற்கான சஹர் உணவை தயாரிக்க தேவையான பொருட்களை வாங்குவதற்காக இங்குள்ளவர்கள் தயாராகி வருகின்றனர்.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பெரும்பாலானோருக்கு ரமலான் மாதம் முழுவதும் பகுதி நேரத்தில் மாத்திரம் பணி புரியக்கூடிய வாய்ப்புகளை நிறுவனங்கள் வழங்கியுள்ளன. கட்டணம் செலுத்தி பார்க் செய்யக்கூடிய வாகனங்களுக்கு போக்குவரத்துதுறை சார்பாக சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமீரக மக்களின் வசதிக்காக போக்குவரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி, குவைத், ஓமன் ஆகிய நாடுகளோடு ஏனைய இஸ்லாமிய நாடுகளிலும் முதல்நாள் நோன்பு நாளை முதல் பிடிக்கப்படும் என தெரிகிறது.

இப்புனித மிகு ரமலான் மாதத்தில் பாவச்செயல்களை விட்டு விலகி நோன்பு நோற்று,விபாதத்துக்கள் செய்து, ஜகாத் சதக்காக்கள் செய்து, நல் அமல்களால் நிரப்பி இறை பொருத்தத்தையும், இறையன்பையும்  நம் அனைவரும் பெற்றிட அதிரை நியூஸ் குழுமத்தின் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

6 comments:

  1. மாஷா அல்லாஹ்,

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    மாஷா அல்லாஹ்

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்...

    ரமலான் முதல் பிறை தேட வேண்டிய நாள்!
    (இன்று 28-6-2014 ஷாஃபான் பிறை 29)

    இன்று 28.06.14 சனிக்கிழமை மஹரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷாஃபான் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்யவேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
    மாநில தலைமையகம்,
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

    தொடர்புக்கு:
    96770 77030,
    99520 56444,
    99520 35444,
    99520 35333

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அல்ஹம்துலில்லாஹ் .....அல்லாஹ் நம் அனைவர்களின் நோன்பையும் ஏற்றுகொள்ள அனைவரும் துஆ செய்யுவோம் .ஆமீன்
    குறிப்பாக அதிகம் வெளிநாடு வாழ் அதிரைமக்களின் நோன்புகாலங்கள் பிறரிடம் வேலைசெய்வதால் மற்றும் பல நாடுகளின் கால நேரமாருதல்களால் நோன்பு சிரமம் கூடியதாகவே அமைகின்றன.

    இங்கு ஜப்பானில் இன்று இரவு முதல் நோன்பு ஆரம்பம் .....பஜார் 02.39 AM , இப்தார் மற்றும் மக்ரிப் 07.05 PM .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.