இன்று காலை 6.30 மணியளவில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் இல்லத்தில் ‘கர்ழன் ஹஸனா’ அழகிய கடன் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம் தலைமை வகிக்க, ‘கர்ழன் ஹஸனா’ அழகிய கடன் அறக்கட்டளையின் கெளரவ ஆலோசகர் அதிரை அஹமது அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், அறக்கட்டளையின் தற்போதைய நிர்வாகிகளான M.C. அலி அக்பர், M.I. ஜமால் முஹம்மது, தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி ஆகியோர் தாங்கள் வைத்திருந்த பொறுப்புகளிலிருந்து விடுபடுவதாகக் கூறி ராஜினாமாக் கடிதங்களை பேரூராட்சித் தலைவரிடம் வழங்கினார்கள்.
கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் பல்வேறு கருத்துகளை வலியுறுத்திக் கூறினார்கள். இறுதியில் புதிதாகக் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் :
தலைவர் : A. அப்துல் ரஹீம்
துணைத் தலைவர் : S. அஹமது அஸ்லம்
செயலாளர் : A. சேக் அலி
துணைச் செயலாளர் : M.U. கமாலுதீன்
பொருளாளர் : S.H. அப்துல் காதர்
இவர்கள் அனைவரும் அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பொறுப்பு வகிப்பார்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
‘கர்ழன் ஹஸனா’ அறக்கட்டளையின் கெளரவ ஆலோசகர் அதிரை அஹமது அவர்கள், தற்போது பொறுப்பில் உள்ள மூன்று பேரின் அனுபவங்களும், ஆலோசனைகளும் தேவை என வலியுறுத்திக் கூறினார். இதை அடுத்து, இந்த மூன்று பேரும் ‘கர்ழன் ஹஸனா’ அறக்கட்டளையின் அறங்காவலர்களாகத் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி,
M.C. அலி அக்பர்,
M.I. ஜமால் முஹம்மது,
தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி
ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஊரின் நலன் கருதி ஏற்படுத்தப்படும் இதுபோன்ற வட்டியில்லா நிதி அமைப்புகளுக்கு மக்கள் ஒத்துழைத்தால் நலமே .
ReplyDelete'கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை '
என்ற முறைமாறி கடன் பெறுவோர் அதை உரிய நேரத்தில் திரும்ப செலுத்தினால் அதுவே சிறந்தவழி.
புதிய நிர்வாகிகளை வரவேற்போம் . முன்னாள் நிர்வாகிகளின் ஆலோசனையும் பெற்றுக் கொள்ளும் விதத்திலான அமைப்பும் வரவேற்கத் தக்கது.
ReplyDeleteபுனித நோன்புக் காலம் நெருங்கும் இவ்வேளையில் அழகிய கடன் அறக்கட்டளையின் செயற்பாடுகள், பணிகள், நிதி ஆதாரம், நோக்கம் போன்றவற்றை சுருக்கமாக ஒரு கட்டுறை தொகுப்பாக அறியத்தந்தால் நன்றாயிருக்கும்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
முதலில் ஒவ்வொருவரும் தம் தம்நிலையில் மிகுந்த புரிதலுடன் இருங்கள், பிறகு செயலில் இறங்குங்கள், புரிதல் இல்லாத இயக்கம் பாதியில் நிற்கும். இதனால் பாதிப்பு உங்களுக்கு இல்லை, பொதுமக்களுக்கு.
மீண்டும் சொல்லுகிறேன், உங்களுக்குள் நன்கு புரிதல் உண்டா? அப்படி நன்கு புரிதல் இருப்பின் உங்கள் இயக்கத்தை யாரும் அசைக்க முடியாது.
உங்கள் பனி உண்மையுடன் ஓங்குக.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
பெரியோர்களின் ஆலோசனைப்படி செயல்படுங்கள்.
ReplyDelete