இந்நிகழ்ச்சிக்கு அக்பர் ஹாஜியார் தலைமை வகிக்க, அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியர் K. செய்யது அஹமது கபீர், பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்கார வேலு ஆகியோர் கல்வியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
முன்னதாக வரவேற்புரையை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தமிழ்துறை ஆசிரியர் A. அஜீமுதீன் நிகழ்த்த, நன்றியுரையை மனித நல உரிமை கழக தலைவர் O.K.M சிபஹத்துல்லாஹ் வழங்கினார்.
சென்ற 2013-2014 ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் முன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டிப் மாநாட்டு மேடையில் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து மஹல்லாவை சேர்ந்த முக்கியஸ்தர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுசிறப்பித்தனர். பெண்களுக்கு தனிஇட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் கடற்கரைதெரு ஜமாத், கடற்கரை தெரு அமீரக அமைப்பு, தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
புகைப்படங்கள் : M. முஹம்மது முகைதீன் B.Sc
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
கருத்த மேகங்கள் வந்து பாராட்ட, ஜில்லென்று காற்று வந்து தாலாட்ட, சிறு மழைத் துளிகள் வந்து வாழ்த்த, என்னால் வந்து பார்க்க முடியாத சூழலில் இனிதே நடந்தேறியது இந்த நிகழ்ச்சி.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
கல்வி மாநாடு மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் - வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாநாட்டில் சிறப்பு பேச்சாளர்கள் கலந்தகொண்டவரில் நண்பர் சிங்கார வேலு, இவர் எப்படி அண்ணா சிங்கார வேலு என்று ஆனார் என்று தெரியவில்லை, நல்ல நகைட்சுவை பேச்சாளர், இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்,
விசுவின் அரட்டை அரங்கம் மூலம் பிரபலமான நண்பன் சிங்கார வேலுவின் இலக்கிய பணி தொடர வாழ்த்துக்கள்
கல்வி மாநாடு மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் - வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
மான் ஷேக்
விழாக் குழுவினர் செய்து இருந்த சிறப்பான ஏற்பாடுகளுக்குப் பாராட்டுக்கள். அதே போல் சிறந்த பேச்சாளர்களையும் வரவழைத்து நிகழ்வை அருமையாக நடத்தினார்கள்.
ReplyDeleteஒரு அபிப்பிராயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். இது விழாக் குழுவினரின் பரிசீலனைக்குரியது.
இவ்வளவு நல்ல ஏற்பாடுகள் செய்து இருந்தாலும் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. அடுத்த வருடன் இன்ஷா அல்லாஹ் இந்த நிகழ்ச்சியை கடற்கரைத் தெருவின் மையப்பகுதியில் நடத்துவது பற்றி விழாக்குழுவினர் ஆலோசிக்க வேண்டும். உதாரணமாக விலைக்காரத் தெருவின் முனையிலோ அல்லது முன்பு தபாலாபீஸ் இருந்த இடத்தின் நான்கு பாதைகள் சந்திக்கும் இடத்திலோ நடத்தினால் அதிகமான பெண்கள் கூட்டம் வர வாய்ப்புண்டு.
மீண்டும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.