சுப்பம்மாள்சத்திரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ,விவசாய சங்க பொறுப்பாளர் அட்வகேட் வி.கருப்பையன் ,ஒன்றியக்குழு உறுப்பினர் குத்புதீன் ஆகியோருடன் சென்று வட்டாட்சியர் இடம் மனு அளித்தனர் .
சுப்பம்மாள்சத்திரம் பருத்திக்குளக்கரை அருகில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் கண்டறியப்பட்டது .அந்த இடத்தின் சர்வே புல எண்களை குறிப்பிட்டு ,ஏழை ,விவசாய ,சிறுபான்மை இன ,மீனவ குடும்பத்தை சேர்ந்த எங்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும் என அந்த பெண்கள் வட்டாட்சியர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர் .
ஆதரவற்ற அந்த ஏழை பெண்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டிய அவசியம் குறித்து சிபிஎம் நிர்வாகிகள் ஆர்.எஸ்.வேலுச்சாமி ,வழக்கறிஞர் வி.கருப்பையன் ,குத்புதீன் ஆகியோர் வட்டாட்சியரிடம் எடுத்து கூறினர் .மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் சட்டத்திற்கு உட்பட்டு விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார் .
மனுவில் சேகம்மாள் ,மதீனா ,ஞானலெட்சுமி,முருகேஸ்வரி ,ரம்ஜான் பீவி உள்ளிட்ட 15 பெண்கள் கையொப்பம் இட்டிருந்தனர்.
படம் : வட்டாட்சியரிடம் குடிமனைப்பட்டா கேட்டு மனு அளிக்க வந்திருந்த சுப்பம்மாள் சத்திரம் கிராம பெண்கள் .
செய்தி : எஸ்.ஜகுபர்அலி
பேராவூரணி.
அதிரை நியூஸ் அய்யா? நமதூருக்கு இப்படி பட்டா வழங்கும் விழா எப்போ வரும்.
ReplyDelete