.

Pages

Tuesday, June 10, 2014

அதிரையில் நடந்த கலைஞரின் பிறந்தநாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டம் !

இன்று இரவு அதிரை பேருந்து நிலையத்தில் திமுக தலைவர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகர திமுக அவைத்தலைவர் H. அப்துல் காதர் தலைமை வகிக்க,நகர செயலாளர் இராம. குணசேகரன், மாவட்ட பிரதிநிதி M. மீராஷா, பழஞ்சூர் K. செல்வம் உட்பட ஏனைய திமுக பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாநில தலைமை கழக பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி, ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமனியன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக வரவேற்புரையை நகர துணை செயலாளர் AMY அன்சர்கான் நிகழ்த்த, நன்றியுரையை நகர துணை செயலாளர் C. தில்லைநாதன் வழங்கினார். இந்த கூட்டத்திற்கு திமுகவினர், கூட்டணி கட்சியினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
  

6 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    துவளாத நெஞ்சங்கள், துள்ளி துள்ளி விளையாடுகின்றன.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. எங்கப்பா அஸ்லத காணோம்

    ReplyDelete
  3. எங்கப்பா அஸ்லத காணோம்

    ReplyDelete
  4. தோல்வியைக் கண்டு துவளாத நெஞ்சங்கள், துள்ளி துள்ளி விளையாடுகின்றன.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. திமுகவின் தோல்விக்கு மா செ க்கள் தான் காரணம் என்கிறார் கலைஞர் ஆனால் குடும்பத்தில் நடக்கும் வெட்டு குத்து காரணத்தை மறுக்கிறார்.

    தமிழ் நாட்டில் மோடி அலை வீசவில்லை தி முக வின் எதிர்ப்பு அலை அதிமுக ஆதரவு அலையில் ஏற்பட்ட சுனாமியில் திமுக அடித்து போய்விட்டது.

    தோல்விக்காக குடும்ப அரசியலில் யாரும் பதவி இறங்கவில்லை ஆனால் குறுநில மன்னர்களான மா செ களை கொட்டத்தை அடக்க அரசியல் மாவட்டத்தை பிரித்து புதிய மா செ தேர்ந்தெடுக்க போறாராம்

    என்ன இருந்தாலும் அஞ்ச நெஞ்சன் அழகிரி பகைத்துக்கொண்டு கட்சியே சீர்செயயமுடியாது.

    அண்ணா கட்சிக்காக முன்னுரை எழுதினார் ஆனால் கலைஞர் முடிஉரை எழுதாமல் இருந்தால் சரிதான்!

    ReplyDelete
  6. பல்லாண்டு வாழ்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.