மாநிலம் முழுவதும் அரசுத்துறை கட்டிடங்களிலும் ,பள்ளிகளிலும், வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் .நிலத்தடி நீர் வறண்டு போகாத வண்ணம் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் உத்தரவுப்படியும் ,மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் என்.சுப்பையன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தொடக்க
கல்வி அலுவலர் ச.கண்ணையன் ஆலோசனையின்படி பேராவூரணி பகுதிகளில் உள்ள அரசு தொடக்க ,நடுநிலைப்பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி,மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன .
பேராவூரணி உதவி தொடக்க கல்வி அலுவலர் வே.ஆனந்தராசு ,கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி உள்ளிட்டோர் பள்ளிகள் தோறும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர் .
ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாவடுகுறிச்சி (கிழக்கு ) யில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவரும் ,கிராம கல்வி குழு தலைவருமான மு.பாரி அழகப்பன் தலைமை வகித்தார் .தலைமை ஆசிரியர் கை.ஈஸ்வரி முன்னிலை வகித்தார்.உதவி ஆசிரியை மூல.வாசுகி ,பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அ.சுப்பிரமணியன் ,பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ம.நீலாவதி ,மகளிர் சுய உதவிக்குழு ,இளைஞர் மன்றம் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
அதே போல் ஆண்டிகச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு கிராம கல்விக்குழு தலைவர் மு.பாரி அழகப்பன் தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர் மு.பொக்கிஷம் ,உதவி ஆசிரியர் க.நீலகண்டன் ,க.அண்ணாராணி,ஜெ.ஹெப்ஸிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சி.பெத்தபெருமாள் ,பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ஜி.தேவிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
மாணவ,மாணவியர் மற்றும் சுய உதவிக்குழுவினர் ,தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.சுப்பையன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி,கலைநிகழ்ச்சிகள் ,பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .
செய்தி : எஸ்.ஜகுபர்அலி ,
பேராவூரணி.
நன்றி.
ReplyDelete