.

Pages

Saturday, August 9, 2014

துபாயில் நேற்று அதிரை அமீனின் நண்பர் ஏமாந்த கதை !

எத்தனையோ வித பிராடுகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், சந்தித்திருப்பீர்கள் அப்படியான ஒரு நூதன ஏமாற்றுப் பேர்வழிகள் குறித்து எச்சரிப்பதே நோக்கம்.

நேற்று காலை பர்துபை பஸ் நிலையம் அருகிலுள்ள கிளினிக்கில் கண்ணுக்கு மருத்துவம் பார்க்கச் சென்ற எனது நண்பர் கூட்டுக்களவானிகளிடம் தலைமுடிக்கு மருந்து வாங்கி ஏமாந்த விதம் பற்றி... சொல்கிறேன் கேளுங்கள்!

தலை முடியுதிர் காலத்தில் இருக்கின்றவர்கள் அல்லது சொட்டையாய் போனவர்கள் அல்லது இளம் நரைக்கு உள்ளானவர்கள் மீண்டும் எப்படியாவது பழைய கரு கரு முடி வளர்ந்து விடாதா என ஏங்குவது இயல்பு அதற்காக அவர்கள் மார்க்கெட்டில் உலா வரும் எண்ணற்ற போலி மருந்துகளை எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கி ஏமாறுவதும் வெளியே சொல்ல முடியா வெட்கம்.

இளம்சொட்டையும் இளம் நரையுமாக வந்து கொண்டிருந்த என் நண்பரை பேச்சுக் கொடுத்து மடக்கிய ஒரு நீணட் தாடியுடைய தொப்பி, ஜூப்பா அணிந்த ஆசாமி நரையை பற்றி யதார்த்தமாக விசாரிப்பது போல் விசாரித்துள்ளார் பின்பு அவருடைய முடி நிறைந்த கருமையான தலையை காட்டி நானும் உன்னைப் போல் தான் இருந்தேன் 'நாட்டு மருந்து வாங்கி தேய்த்தேன் 15 நாட்களில் இப்படி ஆகிவிட்டது' அள்ளி விட்டுள்ளார். தோற்றத்தையும் அறிவுரையையும் பார்த்து நம்பித் தொலைந்த நண்பர் அந்த மருந்து எங்கே கிடைக்கும் என யதார்த்தமாக கேட்க..

இது தான் குரோசரியில வாங்கிய ஆயில்கள்
ஜுப்பா ஆசாமி ரொம்ப நேர்மையா நம்ம ஆளா கையோட கூட்டிக்கொண்டு போய் ஒரு குரோசரி கடையில் 10ம் 10ம் இருபது திர்ஹத்திற்கு ரெண்டு எண்ணெய் பாட்டிலை வாங்கி கொடுத்திருக்கு... இருங்க, இருங்க இன்னும் கதை முடியல...

அதற்கப்புறம் அந்த ஜூப்பா 'வாயில நொழயாத' ரெண்டு மூணு இந்திப்பேர சொல்லி இந்த மூலிகை பொடிகளை வாங்கி இந்த எண்ணெயில கலந்து தேச்சுகிட்டு வாங்கன்னு அப்புராணியா மூஞ்சவச்சுக்கிட்டு பீலா விட அசந்து போன நம்ம நண்பரு 'ஜீ அந்த மருந்து கிடைக்கிற கடைய கொஞ்சம் காட்டி விடுங்களேன்னு' கேட்க, அடுத்தவங்களுக்கு உதவி செய்யிறதுக்கே பிறப்பெடுத்த அந்த ஜூப்பா ஒரு நாட்டு மருந்து கடைய காட்டிவிட்டுட்டு 'எஸ்' ஆயிருச்சு.

 டுபாக்கூர் மருந்து கலக்கிய எண்ணெய் பாட்டில்கள்
நாட்டு மருந்து கடைக்காரனும் ஏதோ ரெண்டு மூணு பொடிகளை மூக்குல திணிக்கிற அளவுக்கு வாங்கிட்டுப் போன 2 எண்ணெய் பாட்டிலில் கொட்டி கலந்து விட்டுட்டு எடு முன்னூறு திர்ஹத்தை என்று சொல்ல துபையில் அடிக்கிற வெயில்ல கூட அப்படி ஒரு மயக்கம் வராத குறையா தல சுத்திப் போயி தெண்டத்த அழுதுட்டு வந்தவரு, தெய்ரா பகுதியில இருக்கிற இன்னொரு நாட்டு மருந்து கடையில போயி அந்த ஜூப்பா சொன்ன மருந்த பத்தி விசாரிச்சா, அப்படி மருந்தே இல்லையாம். 

நீங்களாவது பரவாயில்லை 300 தான் தினமும் ஐநூறு ஆயிரம்னு இந்த கூட்டு களவானி கும்பல்களிடம் பலபேர் பணத்த இழக்குறாங்க என்கிற தகவலையும் சேர்த்து சொன்னாருங்க,

ஏமாந்த நம்ம நண்பரு அந்த ஜூப்பா ஆசாமிய கண்டிப்பா போலீஸ்ல புடிச்சி கொடுக்கணும்னு தீவிரமா இருக்காருங்க!

படிப்பிணை: 
பர்துபை பக்கம் குறிப்பா பஸ் ஸ்டேண்ட் பக்கம் போறவங்க கொஞ்சம் சூதனமா நடந்துக்குங்க! 

(இல்லாட்டி நம்மள மாதிரி முடி இருக்கும் போது சீவுனோம் இப்ப இல்லை, மசுறு போச்சின்னு அப்படியே விட்ருங்க, சந்தோஷம் தலையில இல்லைங்க மனசுலங்க!)

கூடுதல் எச்சரிக்கை: 
இதே பர்துபை பஸ் ஸ்டேண்ட் பக்கம் ஏகப்பட்ட பாகிஸ்தானிகள் புதுப்புது பிராண்ட் மொபைல்களை இருநூறுக்கும் முன்னூறுக்கும் கூவி கூவி விற்பார்கள் வாங்க வேண்டாம் எல்லாம் டுபாக்கூருங்க!

அதிரை அமீன்

7 comments:

  1. அதிரை அமீனின் நண்பர் ஏமாந்தது போல் தெரியல்லை அதிரை அமீன் அவர்களின் தலையில் உள்ள முடியை பார்த்தல்... நீங்கள் தான் கலைவாணி பயலுகளிடம் ஏமாந்தது போல் தெரிகிறது :)

    ReplyDelete
  2. ஏன் அமீன் காக்கா ஏமாந்தது நீங்கதானே
    சும்மா வெக்கபடாம சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. தம்பி அஹ்மத்
      தங்கள் அன்னையிடம் இமாம் ஷாபி பள்ளியில் பால பாடமாக மார்க்கம் பயின்றவன் நான், எனவே ஏமாற்றம் எனக்கு நேர்ந்திருந்தால் அதையும் தைரியமாகவே ஓப்புக் கொள்வேன்.

      Delete
  3. அந்த ஜிப்பா ஆசாமி கண்ணில் நீங்கள் தென்படவில்லை போலும். உங்களைப் பார்த்திருந்தால் எப்படியாவது உங்களை மயக்கிப் பேசி மசிய வைத்திருப்பார். ( ஏனென்றால் 15நாட்களில் சொட்டைத் தலையில் மீண்டும் முடி வளரும் என்று சொன்னால் யாருக்குத்தான் ஆசைவராது. )

    இதுமட்டுமல்ல துபாய் தேரா பகுதியில் நாம் பல வித ஏமாற்றுக் காரர்களை பார்த்து இருக்கிறேன். தொப்பை வயிறுடன் போவோரை பின்தொடர்ந்து போய் தொப்பை குறைவதற்கான விளக்கம் சொல்லி சிலரை அழைத்துக் கொண்டு போகிறார்கள் பலே ஏமாற்று ஆசாமிகள் நல்ல வேலை நான் அவர்களின் கண்களுக்கு தென்படவில்லை.

    ReplyDelete
  4. நீங்கள் சொல்வதை பார்த்தால் நாம் ரொம்ப கவனமாக நடமாட வேண்டும் போல் உள்ளது. உங்களின் இந்த எச்சரிக்கை தகவலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.