நேற்று காலை பர்துபை பஸ் நிலையம் அருகிலுள்ள கிளினிக்கில் கண்ணுக்கு மருத்துவம் பார்க்கச் சென்ற எனது நண்பர் கூட்டுக்களவானிகளிடம் தலைமுடிக்கு மருந்து வாங்கி ஏமாந்த விதம் பற்றி... சொல்கிறேன் கேளுங்கள்!
தலை முடியுதிர் காலத்தில் இருக்கின்றவர்கள் அல்லது சொட்டையாய் போனவர்கள் அல்லது இளம் நரைக்கு உள்ளானவர்கள் மீண்டும் எப்படியாவது பழைய கரு கரு முடி வளர்ந்து விடாதா என ஏங்குவது இயல்பு அதற்காக அவர்கள் மார்க்கெட்டில் உலா வரும் எண்ணற்ற போலி மருந்துகளை எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கி ஏமாறுவதும் வெளியே சொல்ல முடியா வெட்கம்.
இளம்சொட்டையும் இளம் நரையுமாக வந்து கொண்டிருந்த என் நண்பரை பேச்சுக் கொடுத்து மடக்கிய ஒரு நீணட் தாடியுடைய தொப்பி, ஜூப்பா அணிந்த ஆசாமி நரையை பற்றி யதார்த்தமாக விசாரிப்பது போல் விசாரித்துள்ளார் பின்பு அவருடைய முடி நிறைந்த கருமையான தலையை காட்டி நானும் உன்னைப் போல் தான் இருந்தேன் 'நாட்டு மருந்து வாங்கி தேய்த்தேன் 15 நாட்களில் இப்படி ஆகிவிட்டது' அள்ளி விட்டுள்ளார். தோற்றத்தையும் அறிவுரையையும் பார்த்து நம்பித் தொலைந்த நண்பர் அந்த மருந்து எங்கே கிடைக்கும் என யதார்த்தமாக கேட்க..
அதற்கப்புறம் அந்த ஜூப்பா 'வாயில நொழயாத' ரெண்டு மூணு இந்திப்பேர சொல்லி இந்த மூலிகை பொடிகளை வாங்கி இந்த எண்ணெயில கலந்து தேச்சுகிட்டு வாங்கன்னு அப்புராணியா மூஞ்சவச்சுக்கிட்டு பீலா விட அசந்து போன நம்ம நண்பரு 'ஜீ அந்த மருந்து கிடைக்கிற கடைய கொஞ்சம் காட்டி விடுங்களேன்னு' கேட்க, அடுத்தவங்களுக்கு உதவி செய்யிறதுக்கே பிறப்பெடுத்த அந்த ஜூப்பா ஒரு நாட்டு மருந்து கடைய காட்டிவிட்டுட்டு 'எஸ்' ஆயிருச்சு.
நீங்களாவது பரவாயில்லை 300 தான் தினமும் ஐநூறு ஆயிரம்னு இந்த கூட்டு களவானி கும்பல்களிடம் பலபேர் பணத்த இழக்குறாங்க என்கிற தகவலையும் சேர்த்து சொன்னாருங்க,
படிப்பிணை:
பர்துபை பக்கம் குறிப்பா பஸ் ஸ்டேண்ட் பக்கம் போறவங்க கொஞ்சம் சூதனமா நடந்துக்குங்க!
கூடுதல் எச்சரிக்கை:
இதே பர்துபை பஸ் ஸ்டேண்ட் பக்கம் ஏகப்பட்ட பாகிஸ்தானிகள் புதுப்புது பிராண்ட் மொபைல்களை இருநூறுக்கும் முன்னூறுக்கும் கூவி கூவி விற்பார்கள் வாங்க வேண்டாம் எல்லாம் டுபாக்கூருங்க!
அதிரை அமீனின் நண்பர் ஏமாந்தது போல் தெரியல்லை அதிரை அமீன் அவர்களின் தலையில் உள்ள முடியை பார்த்தல்... நீங்கள் தான் கலைவாணி பயலுகளிடம் ஏமாந்தது போல் தெரிகிறது :)
ReplyDeleteReally it is my friend
DeleteI believe
ReplyDeleteஏன் அமீன் காக்கா ஏமாந்தது நீங்கதானே
ReplyDeleteசும்மா வெக்கபடாம சொல்லுங்க
தம்பி அஹ்மத்
Deleteதங்கள் அன்னையிடம் இமாம் ஷாபி பள்ளியில் பால பாடமாக மார்க்கம் பயின்றவன் நான், எனவே ஏமாற்றம் எனக்கு நேர்ந்திருந்தால் அதையும் தைரியமாகவே ஓப்புக் கொள்வேன்.
அந்த ஜிப்பா ஆசாமி கண்ணில் நீங்கள் தென்படவில்லை போலும். உங்களைப் பார்த்திருந்தால் எப்படியாவது உங்களை மயக்கிப் பேசி மசிய வைத்திருப்பார். ( ஏனென்றால் 15நாட்களில் சொட்டைத் தலையில் மீண்டும் முடி வளரும் என்று சொன்னால் யாருக்குத்தான் ஆசைவராது. )
ReplyDeleteஇதுமட்டுமல்ல துபாய் தேரா பகுதியில் நாம் பல வித ஏமாற்றுக் காரர்களை பார்த்து இருக்கிறேன். தொப்பை வயிறுடன் போவோரை பின்தொடர்ந்து போய் தொப்பை குறைவதற்கான விளக்கம் சொல்லி சிலரை அழைத்துக் கொண்டு போகிறார்கள் பலே ஏமாற்று ஆசாமிகள் நல்ல வேலை நான் அவர்களின் கண்களுக்கு தென்படவில்லை.
நீங்கள் சொல்வதை பார்த்தால் நாம் ரொம்ப கவனமாக நடமாட வேண்டும் போல் உள்ளது. உங்களின் இந்த எச்சரிக்கை தகவலுக்கு மிக்க நன்றி.
ReplyDelete