.

Pages

Sunday, August 10, 2014

துபாயில் தமிழ் பேச்சிலர் ரூம்ஸ் திறப்பு விழாவில் பங்கேற்ற அதிரை கவிஞர் 'கவியன்பன்' கலாம் !

தமிழகத்திலிருந்து துபாய் வந்து வேலை தேடும் தமிழ் சகோதரர்களுக்காக ஆண்டு வாடகைக்கு எடுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட வில்லா துவக்க விழா கடந்த 08.08.2014 அன்று மாலை 6.30 மணியளவில் தெய்ரா துபாய் ETA Star House க்கு பின்புறம் உள்ள DUTAS தமிழ்  பேச்சிலர் ரூம்ஸ்ஸில் நடைபெற்றது.

இதில் துபாய் தமிழர் சங்கமத்தின் நிறுவனர் திரு. எக்ஸலன்ட் முருகேஷ் அவர்கள் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளர் திரு பாளை அப்துல் கரீம், கலை இலக்கிய பிரிவு செயலாளர் அதிரை திரு கவியன்பன் கலாம், தொழிற் பிரிவின் மார்க்கெட்டிங் Head திரு.முஸ்தபா நூரணி , IT Head திரு. ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் இனிதே துவங்கியது.

வில்லா நுழைவு வாயிலை துபாய் தமிழர் சங்கமத்தின் நிறுவனரின் அன்னையார் திருமதி ராமாமிர்தத்தம்மாள் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்தினார்.

டாக்டர் சுமதி முருகேசன் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்தார் .
ரூம் "அ" வை நத்தம் திரு சாதிக் அவர்களும்,
ரூம் "ஆ" வை காயல்பட்டினம் மௌலான மௌலவி திரு.சுலைமான் ETA , மூன் டிவி ஆலிம் அவர்களும்
ரூம் "இ " வை சாகுல் ஹமீது (துபாய் ஹெல்த் ஆதாரிட்டி) அவர்களும்
ரூம் "ஈ " வை நெல்லை ஜிந்தா அவர்களும்
ரூம் "உ " வை திரு கவியன்பன் கலாம் அவர்களும்
ரூம் "ஊ " வை திரு பாளை அப்துல் கறீம் அவர்களும் திறந்து வைத்தனர்
Villa வை நமக்கு பிடித்து கொடுத்த திரு சாதிக் அவர்களுக்கு ஒரு கிராம் தங்க காசும் மிகசிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் DUTAS தொழிற் பிரிவின் மார்க்கெட்டிங் Head திரு.முஸ்தபா நூரணி அவர்களுக்கு ஒரு கிராம் தங்க காசும் அன்பளிப்பாக அளித்து கௌரவிக்கப்பட்டது.

DUTAS நிறுவனர் தமது தலைமை உரையில் DUTAS ன் அடுத்த வெற்றி திட்டமான "மில்லியன்ஸ் " ( துபாயில் 1 கேட்டரிங் யூனிட் 10 மினி ரெஸ்டரென்ட் ) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினர். அதற்க்கான Project Demo விரைவில் வெளியிட உள்ளதாகவும் உலக தமிழர்களை தொழிற் ரீதியாக ஒருங்கிணைக்க துபாய் தமிழர் சங்கமம் மேற்கொள்ளும் இந்த அறிய முயற்சிக்கு தமிழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்தார்

விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் IT Head திரு. ராஜ்குமார் அவர்கள் நன்றி கூறினார்.

நன்றி : தமிழர் சங்கமம் துபாய்



8 comments:

  1. கலாம் காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இதில் பதிவேற்றப்பட்டுள்ள முதல் புகைப்படம் தாங்கள் குத்துவிளக்கு ஏற்றுவது போன்று தோற்றமளிக்கிறது, இது பிற மதங்களை பின்பற்றுவோரின் வணக்கமுறை என்பதை இந்த லிங்குகளை படித்து அறிந்து கொள்ளலாம்.

    http://bsakthivel.blogspot.ae/2013/03/blog-post_4174.html

    http://www.aanmegam.com/Mangala%20Vilakku.htm

    மற்ற சமுதாய மக்களுடன் நட்புடன், சகோதரத்துவத்துடன் பழகுவதை இஸ்லாம் தடுக்கவில்லை என்பதை என்னை விட தாங்கள் நன்றாக அறிவீர்கள் ஆனால் அவர்களின் வணக்க வழிபாடுகளை பின்பற்றும் சூழலில் எத்தகைய சமரசத்திற்கும் இடம்கொடாமல் உண்மையை சொல்லி ஒதுங்கி கொள்வதே நம் ஈமானை பாதுகாக்கும் செயலாகும்.

    நபி(ஸல்)கூறினார்கள்
    யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்பது நபிமொழி.
    நூல்: அபூதாவூத் 3512.

    என்ற எச்சரிக்கையை நானும் நீங்களும் என்னாளும் கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்வானாக!

    குறிப்பு: நோக்கம் குற்றம் காண்பதல்ல மாறாக நாமறிந்த ஒரு விடயத்தை பிறருக்கும் சுட்ட வேண்டுமென்பதே. எனவே, இது குறித்த தொடர் வாதப்பிரதிவாதங்களை தவிர்க்க விரும்புகிறேன்.

    ReplyDelete
  2. கலாம் காக்கா குத்து விளக்கு ஏற்றியது தானாக நிகழ்ந்த நிகழ்வாக தெரியவில்லை. கூட இருந்தவர்கள் அவரை உசுப்பேற்றியதில் எதேச்சையாக நடைபெற்று இருக்கலாம். எனினும் இஸ்லாத்திற்கு மாற்றமான செயல் என்பதால் எதிர்காலத்தில் இவற்றை தவிர்த்துகொள்வார்கள் என நம்புவோம்.

    ReplyDelete
  3. குத்து விளக்கு இப்படித்தன்னை குத்தும் என்று கவியன்பனுக்குத் தெரியாதா?
    ஆனாலும் சத்தம் போட்டுச் சொல்கிறேன் இது சுத்தமாக சரியில்லை. நண்பர் அமீன் அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

    இன்னும் எத்தனை பேர் கத்தப் போகிறார்களோ கவியன்பன்?

    ReplyDelete
  4. குத்து விளக்கு படத்தை நீக்கிவிடுவது நல்லது
    நீக்கவில்லையென்ரால் கவியன்பன் அவர்களை குத்துவிளக்கு குத்திக்காட்டிக்கொண்டே இருக்கும்

    ReplyDelete
  5. சுயநலம் மனிதர்களின் சுய நினைவை இழக்கச் செய்கிறது என்பதற்கு கவிஞர் கலாம் காக்காவின் புகைப் படமும் ஒரு எடுத்துக்காட்டாக ஆகிவிட்டது.வேதனை அளிக்கிறது.
    கலாம் காக்காவை பற்றி நானும் கேள்வி பட்டு இருக்கிறேன்.நல்ல கவிஞர். மார்க்க அறிவும் உலக அறிவும் பெற்ற நீங்களே சிருக்கான விசயத்துக்கு துணை போகலாமா..??

    ஈமானில் உ றுதியும் கொள்கையில் பிடிப்பினையும் பலமாக உள்ளவர்கள் இத்தகைய மார்க்கத்திற்கு புறம்பான காரியத்திற்கு உடன்பட மாட்டார்கள்.

    அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து இணை வைத்தலை விட்டும் சிருக்கான காரியத்தை விட்டும் தூரமாக்கி வைப்பானாக ஆமீன்.

    ReplyDelete
  6. கலாம் காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இதில் பதிவேற்றப்பட்டுள்ள முதல் புகைப்படம் தாங்கள் குத்துவிளக்கு ஏற்றுவது போன்று தோற்றமளிக்கிறது, இது பிற மதங்களை பின்பற்றுவோரின் வணக்கமுறை என்பதை இந்த லிங்குகளை படித்து அறிந்து கொள்ளலாம்.

    http://bsakthivel.blogspot.ae/2013/03/blog-post_4174.html

    http://www.aanmegam.com/Mangala%20Vilakku.htm

    ReplyDelete
  7. அதிரை கவியன்பன் குத்துவிளக்கு ஒரே ஒருதடவை ஏற்றிவைததற்கே இப்படி ‎எல்லோரும் குதிக்கிறேலே. ஊரிலும், வெளிநாடுகளில் சம்பாதிப்போரில் பலர் ‎ஒவ்வொரு வினாடியும் குத்துவிளக்கை ஏற்றிக் கொண்டே இறுக்கிறார்களே. ‎இதுக்கு குதிக்க யாரும் இல்லையா?‎

    ஊரில் கல்யாணத்தில் நிக்காஹ் எழுதும்போது மாப்பிள்ளை வீட்டார் ஏதோ ‎ஒரு குறிப்பிட்ட தங்க கிராமை பெண்ணுக்கு மஹர் கொடுப்பதாக சபை ‎முன்னிலையில் சொல்லி நிக்காஹ் எழுதுகிறார்களே, பிறகு சபைக்கு ‎தெரியாமல் பெண் வீட்டாரிடம் கர கர என்று ஒரு துரும்பு விடாம ‎கரக்கிரான்களே. இதுக்கு குதிக்க யாரும் இல்லையா?‎

    ஊரில் பைத்துல்மால் இருக்கு, அளவுக்கு அதிகமாக பணம் படைத்தவர்கள் ‎உண்டு. தினம் ஐவேளை தொழுகிற கூட்டம் இருக்கு, தினம் பயான் நடக்குது, ‎மூளைக்கு மூளை தெரு பயான் வேறு. இவை எல்லாம் இருந்து என்ன பயன்? ‎வட்டியை ஒழிக்க முடியலையே, அதிகாலையிலேயே முதல் போனி எது ‎தெரியுமா? அது வட்டி. இதுக்கு குதிக்க யாரும் இல்லையா?‎

    ஊரில் திருட்டு, ஏமாற்று, இவை எல்லாம் பரிபூரணமாக நடந்து கொண்டு ‎இருக்கு, இதுக்கு குதிக்க யாரும் இல்லையா?‎

    லாவண்யாவில் விருந்து, அதுவும் பிரியாணி என்றால் ஆண்களும் ‎பெண்களும் குதியாய் குதிக்கிறார்களே. இதெல்லாம் ஒரு குதியா?‎

    எதுக்கு குதிக்கணும், எதுக்கு குதிக்கக் கூடாது என்று தெரியாத ‎நீங்களெல்லாரும் பரிசுத்தவான்களா? ‎

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.