அதனை திறந்து பார்க்காமல் தனது மகனும், தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் மாவட்ட தலைவருமான அன்சாரியிடம் ஒப்படைத்து யாரும் தேடி வந்தால் கொடுத்து விடும்படி கூறியுள்ளார். அவரும் அதனை திறந்து பார்க்காமல் கடையில் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டார்.
இந்நிலையில் பணப்பையை கண்டெடுத்த அப்துல் ரெஜாக் மார்ச் ம தேதி மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார்.
நீண்ட நாட்கள் ஆகியும் யாரும் கேட்டு வராததால், நேற்று முன்தினம் அதனை அன்சாரி திறந்து பார்த்தபோது அதில் ₹ 500 கட்டுகள் கொண்ட ₹ 40 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அன்சாரி பைக்குள் பார்த்தபோது, நாகை மாவட்டம், திருப்பூண்டியில் உள்ள ஒரு வங்கிக்கு செலுத்த வேண்டிய ரசீது இருந்தது தெரியவந்தது. அதில் நாகை மாவட்டம் திருப்பூண்டியில் உள்ள வங்கிக்கு செலுத்த வேண்டிய ரஷீதும் இருந்தது.
இதனையடுத்து திருப்பூண்டி தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு சம்மந்தப்பட்ட வங்கியிடம் விசாரித்தபோது திருப்பூண்டி உசேன் ஷா (60) என்பருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
உடனே முத்துப்பேட்டை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உசேன்ஷாவை முத்துப்பேட்டைக்கு நேற்று வரவழைத்து அவரிடம் கைப்பை மற்றும் பணத்தை ஒப்படைத்தனர். உசேன் ஷா மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக்கொண்டார். இச்செய்தியை கேள்விப்பட்ட பொதுமக்கள் அன்சாரி மற்றும் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை வெகுவாக பாராட்டினர்.
நன்றி:தமிழ் ஹிந்து

மாஷா அல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDelete