.

Pages

Saturday, March 14, 2015

அதிரையில் தீவிர வாகன சோதனை: சிறார்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறைந்த வயதுடையவர்கள் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டினால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. ஜி.தர்மராஜன் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அதிரையில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் குறைந்த வயதுடையவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, நகரப்பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் விதிமுறைகளை மீறி குறைந்த வயதிலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் விபத்துகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

இதை கட்டுப்படுத்த, எஸ்.பி. ஜி.தர்மராஜன் முடிவு செய்துள்ளார். அதன்படி, போலீஸார் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்று, காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டு அவர் தெரிவித்துள்ளதாவது:
காவல் துணை கண்காணிப்பாளர்கள் தங்கள் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி வாகன சோதனை நடத்த வேண்டும். அப்போது சிறுவயதுடையவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அப்போது தான் அடுத்தமுறை, தகுந்த வயது வரும் வரை அவர்களின் பெற்றோர் இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல் முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கையில் போலீஸார் எந்த தயக்கமும், தயவும் காட்டக்கூடாது. மாவட்டத்தில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்பவர்கள் மீதும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.தர்மராஜன்.

இந்த உத்தரவை போலீஸார் முறையாக அமலாக்கம் செய்தால் மட்டுமே விபத்துகளை கட்டுப்படுத்த முடியும்.
* File Photo

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இந்த நடவடிக்கையில் போலீஸார் எந்த தயக்கமும், தயவும் காட்டக்கூடாது. மாவட்டத்தில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்பவர்கள் மீதும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.தர்மராஜன்.

    இந்த உத்தரவை போலீஸார் முறையாக அமலாக்கம் செய்தால் மட்டுமே விபத்துகளை கட்டுப்படுத்த முடியும்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. வரவேற்கத்தக்க உத்தரவு, உண்மையாகவே இது நடைமுறைக்கு வர வேண்டும். ஏனெனில் பல போக்குவரத்து காவலர்களுக்கு முறைகேடாக சம்பாதிக்கும் வழியும் இதுவே.

    ReplyDelete
  3. மிகவும் வரவேற்கத்தக்க உத்தரவு !இந்த உத்தரவை போலீஸார் முறையாக அமலாக்கம் செய்தால் மட்டுமே விபத்துகளை கட்டுப்படுத்த முடியும்

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.தர்மராஜன். அவர்களுக்கு நன்றி ! நன்றி!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.