.

Pages

Friday, March 13, 2015

தஞ்சையில் தமுமுகவின் 119 வது புதிய ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் !

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செயல்படுத்தி வரும் பல்வேறு சமூக சேவைகளில் ஆம்புலன்ஸ் சேவையும் ஒன்று. அனைத்து சமூதாய மக்களின் பாராட்டுதலையும் - வரவேற்பையும் பெற்று வரும் இந்த சேவையை பல்வேறு ஊர்களுக்கு விரிவு படுத்தப்பட்டும் வருகின்றது. இதற்காக தயாள மனம் படைத்த பலர் நிதிஉதவி செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை மற்றும் சுற்று வட்டாரபகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் புதிதாக ஆம்புலன்ஸ் வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதன் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமுமுகவின் 119  வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் இன்று 13-03-2015 மாலை தஞ்சையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஐ.எம் பாதுஷா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, தமுமுக பொது செயலாளர் அப்துல் சமது, மமக மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா ஆகியோர் கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தின் இறுதியில் தஞ்சை நகர தமுமுக செயலாளர் ஏ.எம் சித்திக் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. தமிழக அரசுவையே பின்னுக்கு தள்ளி விடும் நம் இஸ்லாமியர்கள் சேவை TMMK ஆம்புலன்ஸ் மற்றும் TNTJ ரத்தம் தானம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.