கூட்டத்திற்கு அதிரை பேரூர் அவைத்தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்து, வரவேற்புரை ஆற்றினார். அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச். அஸ்லம், பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பா. இராமநாதன், பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், மாவட்ட பிரதிநிதி மீராஷா ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
கூட்டத்தில் திமுக தலைமை அறிவித்த அதிரை பேரூர் நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கூட்டத்தின் தீர்மானங்களாக திமுக 14 வது அமைப்பு தேர்தல் முடிவினை ஏற்று அதிரை பேரூர் நிர்வாகிகளாக பணியாற்றிட வாய்ப்பு வழங்கிய திமுக தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் பேரூரில் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதிரையின் அனைத்து வார்டுகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்றும், வலிமையோடு பணியாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
2016 ம் ஆண்டு திமுக தலைவர் கலைஞர், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரின் தலைமையின் கீழ் திமுக ஆட்சி அமைய ஒற்றுமையுடன் செயல்பட்டு அதிக வாக்குகள் பெற பாடுபடுவது என்றும், அதிரையில் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பது - போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க முயற்சிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் கடந்த ஆண்டுகளில் அதிரையின் பல்வேறு பகுதிகளில் மரணமடைந்த திமுகவினருக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் பேரூர் துணை செயலாளர் தில்லை நாதன் நன்றி கூறினார். இதில் திமுக மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.








பள்ளத்தில் விழுந்த யானையாக காட்சி அளிக்கும் தி மு க வை வெளியே கொண்டுவரும் பளுதூக்கி Crane களாக இவர்கள் செயல்பட வாழ்த்துக்கள்.
ReplyDelete