.

Pages

Friday, March 13, 2015

அபுதாபியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய கருத்தரங்கம் நிகழ்ச்சி !

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 68-வது நிறுவன தினத்தை முன்னிட்டு அமீரக காயிதேமில்லத் பேரவை சார்பில் நிறுவன தின கருத்தரங்கம் நேற்று மாலை அபுதாபியில்  நடைபெற்றது. அமீரக காயிதேமில்லத் பேரவையின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை A.S.முஹம்மது  அன்சாரி இல்லத்தில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்திற்க்கு பேரவையின் துணை தலைவர் கனிமொழிக் கவிஞர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார் தலைமை வகித்தார்.அமீரக தொழிலதிபர் லால்பேட்டை முஹம்மது அலி முன்னிலை வகித்தார். மானியம் ஆடூர் மௌலவி இல்யாஸ் ஃபாஜில் மன்பஈ இறைமறை வசனங்களை ஓதினார்.பேரவையின் அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை ஷாஹுல் ஹமீத் வரவேற்புறையாற்ற அதிரை கவியன்பன் கலாம் தாய்ச்சபையைப் பற்றி கவிதை வாசித்தார்.பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை மௌலவி அப்துர்ரஹ்மான் அறிமுவுரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமை நிலைய பேச்சாளர் லால்பேட்டை சல்மான் ஃபாரிஸ் துவக்கவுரை நிகழ்த்தினார். அய்மான் சங்க பொதுச்செயலாளர் S.A.C. ஹமீத்,மௌலவி ஹுசைன் மக்கீ ஆலிம்,பாரதி நட்புக்காக கலீல்,அதிரை காதர் மைதீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.  சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த தொழிலதிபர் கனியூர் மௌலவி இஸ்மாயில் நாஜி,நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரியின் பொதுச்செயலாளர் எஸ்கொயர் சாதிக்,தொழிலதிபர் கும்பகோணம் ஜர்ஜிஸ் ஆகியோரின் கருத்துரைகள் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது.

இவர்களோடு நீடூரைச் சார்ந்த முஹம்மது இக்பால்,நஜீர் அஹ்மத் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்தனர். பேரவையின் பொருளாளர் S.K.S. ஹமீதுர்ரஹ்மான் தாய்ச்சபையின் கொள்கை கோட்பாடுகளைப் பற்றியும்,அதன் செயல்பாடுகளை விளக்கியும் சிறப்புரையாற்றினார். பேரவையின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை A.S.முஹம்மது  அன்சாரி நன்றியுரை நிகழ்த்த அபுதாபி காயல்பட்டணம் ஜமாஅத் தலைவர் மௌலவி ஹபீபுர்ரஹ்மான் ஆலிம் அவர்களின் துஆவுடன் கருத்தரங்கம் இனிதே நிறைவுப் பெற்றது. இக்கருத்தரங்கில் அமீரக காயிதேமில்லத் பேரவையினர்,அய்மான் சங்கத்தினர்,பல்வேறு ஊர்ஜமாஅத்தினர்கள், சமுதாயப் பிரமுகர்கள் ஆகியோர் திரளாக பங்கேற்றனர். கருத்தரங்கத்திற்க்கான ஏற்பாடுகளை அமீரக காயிதேமில்லத் பேரவையின் அபுதாபி மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

பரிந்துரை: 'கவியன்பன்' கலாம்
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.