.

Pages

Friday, March 13, 2015

சேர்மன் வாடி அருகே இருசக்கர வாகனம் மோதி விபத்து !

சேர்மன் வாடி அருகே புதிதாக போட்டப்பட்ட சாலையில் ஏறிச்சென்ற இருசக்கர வாகனம் எதிரே கடையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணம் செய்த இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பகுதியில் கூட்டம் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

புதிதாக போடப்பட்ட சாலை உயரமாக இருப்பதால் வர்த்தக நிறுவனங்கள் - உணவகங்களுக்கு வருவோர் சாலையை அடைத்து கொள்ளும் வகையில் வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டு விடுவதாக கூறப்படுகிறது.
 
 

1 comment:

  1. புதிதாக போடப்பட்டுள்ள தார் சாலையின் ஓரத்தின் இடையில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்களை அதிரை பேரூராட்சி நிர்வாகம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.,அத்துடன் அபராத தொகையையும் விதிக்க வேண்டும்.
    இதனை இவர்கள் செய்வார்களா?????

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.