.

Pages

Thursday, March 5, 2015

அதிரையில் பொதுத்தேர்வு குறித்து மாணவர்களிடேயே தீவிர விழிப்புணர்வு பிரசாரம் !

12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தமிழகமெங்கும் இன்று முதல் துவங்கியுள்ளது. இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் அரசு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவிகளிடேயே பொதுத்தேர்வு குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் அதிரை நகர நிர்வாகிகள் தீவிரமாக இன்று ஈடுபட்டனர்.

பி.எஃப்.ஐ டிவிசன் பிரசிடென்ட் வழக்கறிஞர் நிஜாமுதீன் தலைமையில், உறுப்பினர்கள் அதிரை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் 12 மற்றும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது மாணவர்கள் பின்பற்றக்கூடிய கடமைகள் என்னென்ன என்பது குறித்து தமிழக தேர்வுத்துறை அறிவித்த விளக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மேலும் தேர்வில் கடைபிடிக்கக்கூடிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
 
 
 

3 comments:

  1. படிபடி என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நெருக்கடி தராமல் , மற்றவர்களை விட நம் குழந்தைகள் சிறந்த படிப்பாளியாக வரவேண்டும் என்ற நோக்கத்தில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அணுக வேண்டும். தேர்வுக்கு தயாராக இருக்கும் மாணவர்களின் இலக்கும் சிந்தனையும் தெளிவாக இருக்க வேண்டும்.

    குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவது அவர்களுக்கு நெருக்கடியை தரும். குடும்பத்தினர் தரும் நெருக்கடி குழந்தைகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் தேர்வு எழுதும் மாணவர்கள் அழுத்தத்திற்கு ஆளாக கூடாது. தேர்வில் தேர்ச்சி பெறுவது முக்கியம். ஆனால் இதனை சுமையாக கருதக்கூடாது. வாழ்த்துக்கள் மாணவர்களே!

    ReplyDelete
  2. பொது தேர்வை சந்திக்கிறோம் என்பதனை நினைத்து பயப்படாமல் சந்தோசமாக எதிர் கொள்ளுங்கள். இன்ஷா அல்லா வெற்றி பெற இறைவனிடம் துஆ செய்கிறோம் .

    ReplyDelete
  3. பொது தேர்வை சந்திக்கிறோம் என்பதனை நினைத்து பயப்படாமல் சந்தோசமாக எதிர் கொள்ளுங்கள். இன்ஷா அல்லா வெற்றி பெற இறைவனிடம் துஆ செய்கிறோம் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.