.

Pages

Thursday, March 12, 2015

கரையூர் தெருவில் புதிதாக கட்டப்பட்ட மின்சார கலையரங்கம் திறப்பு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை கரையூர் தெரு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள வளாகத்தில் ₹ 5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட மின்சார கலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கரையூர் தெரு கிராம பஞ்சாயத்தார்கள் தலைமை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்ட தொழிலதிபர் என்.எஸ்.இ சிட்டி பாபு அவர்கள் மின்சார கலையரங்கத்தை திறந்து வைத்தார்.

பஞ்சாயத்தார்களின் வேண்டுகோளை ஏற்று நிதி உதவி வழங்கிய தொழிலதிபர் என்.எஸ்.இ சிட்டி பாபு அவர்களுக்கு கரையூர் தெரு கிராம பஞ்சாயத்தார்கள் - கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கரையூர் தெரு கிராம பஞ்சாயத்தார்கள் எம்.முத்துக்குமரன், சி.ஆறுமுகசாமி, பி.நாகராஜ், எம்.முத்துசாமி, எம்.கணேஷன், எம்.லட்சமிகாந்தன், எம்.எழுமலை. எஸ். காளிதாஸ் ஆகியோருடன் கரையூர் தெரு கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.